Sunday, March 15, 2009

நன்றி யூதனே!

யூத அரக்கனுக்கு இதயம் இருக்குமோ?
யுத்த இருள் நீங்க உதயம் பிறக்குமோ?
மானுடம் உலகில் மாண்டு விட்டதோ?
இல்லை…மாபாதகம் உலகைஆண்டு விட்டதோ?

ஆக்கிரமிப்பு என்றார்…அமோக வரவேற்பு!
விடுதலை என்றோம்…வெண் பாஸ்பரசு குண்டுகள்!
அழிப்போம் என்றார்…சாட்டுப்(chat) பேசினர்!
அமைதி என்றோம்…‘வீட்டோ’(Veto) வீசினர்!

மழலைகள் மடிந்தன என்றோம்…
இஸ்ரேல் மதில்களும் இடிந்தன என்றார்!
மானிடன் ஆத்மா என்றோம்…
இரண்டுமே குற்றங்கள் என்றார்!

முஸ்லிமே!முதல் கிப்லா தகர்ந்தது…
ஹரத்தில் கஃபா என்றோம்!
முஸ்லிம்கள் கதறினர்…
எல்லைக்கு வெளியே என்றோம்!

வாழ வழி கேட்டார்…
பாதையை வழி மறித்தோம்!
மீட்க படை கேட்டார்…
முகாமில் பூட்டி வைத்தோம்!
ஆக்கிரமிப்பை எதிர்த்தார்...

‘ஜிஹாத்’ அபத்தம் என்றோம்!
கலீபா எங்கே என்றார்...
பழங்கதை எதற்கு என்றோம்!
தொடர்ந்தோம்! தொடர்ந்தோம்!

இறை நேசர்களை சிறைக்குள் அடைத்தோம்!
பொது எதிரியை இமயமாய் வளர்த்தோம்!
தூய தியாகிகளை தூக்கிலே போட்டோம்!
வீர வரலாற்றை வீணே மறைத்தோம்!

இழிவு தரும் தீர்வுகள் பேசினோம்!
அழிவு தரும் அமைதிகள் காத்தோம்!!
பேசிய தீர்விலேஇஸ்லாம் இருந்ததா?
வீசிய பொதிகளில் விமோசனம் கிடைத்ததா?

முஸ்லிமே! இனியொருமுறை
பேசோம்!!!பேசோம்! பேசோம்!!
இனியொருமுறை பேசோம்!!!
இனிப்பேச்சு புதுமொழியில்…
ஒரே அணியின் பொறிமுறையில்…

முஸ்லிமே!தாகூத்தை வெட்டி வீழ்த்துவோம்…
உம்மத்தாய் ஒட்டி வாழ்வோம்…
கிலாபத்தை எட்டி மீள்வோம்…
ஷஹாதத் கொடி நட்டி ஆள்வோம்…
இன்ஷா அல்லாஹ்