Wednesday, March 18, 2009

இந்திபாதாவுக்காக இந்தளவாவது செய்யுங்கள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

சிலர் இப்படிக் கேட்பதுண்டு - 'ஏன் இன்திபாழா பற்றிய உணர்ச்சி பலவீன மடைந்துள்ளது?' 'உலகெங்கும் எழுந்த இன்திபாழா போராட்டத்திற்க்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் ஏன் மறைந்து போயின?' 'பொருளாதாரத் தடைகள் பற்றிய பேச்சுக்கள் ஏன் ஒலிப்பதில்லை?' 'சில நிவாரண அமைப்புகளே வருந்தும் அளவுக்கு இன்திபாழாவுக்கான உதவிகள் ஏன் குறைந்து விட்டன?'
ஆம்! உண்மைதான் இவற்றுக்கெல்லாம் காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இன்திபாழாவைப் பற்றிய சிந்தனையை முஸ்லிம்களை விட்டும் திசைதிருப்புவதற்காக வெளிசக்திகள் மேற்கொள்ளும் முயற்சிகளும் இவற்றுள் அடங்கும் நமக்குள்ளே இருக்கும் சில அம்சங்களும் இந்நிலைக்கு காரணமாய் அமைந்துள்ளன. அது பற்றியே இங்கு கூற விரும்புகிறோம்.
பலஸ்தீன் இன்திபாழாவும் சரி, வேறு எந்தப் பிரச்சினையும் சரி உள்ளத்தில் ஒரு வித உணர்வை ஏற்படுத்தி அதன் விளைவாக உள்ளமும் உறுப்பும் குழப்பமடைகின்றன இக்குழப்பத்திலிருந்து வெளியேற விரும்பும் ஒருவர். தனது உணர்ச்சியை செயலில் காட்ட முனைகிறார் சாதகமான ஒரு செயலாக இதனை வெளிப்படுத்த முடியாதபோது, பாதகமான செயலின்பால் அவர் தள்ளப்படுகிறார். இந்த வகையில்தான் பலஸ்தீன் இன்திபாழாவும்!
தமது உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் சாதகமான முறையில் வெளிப்படுத்துவதற்கான வழிமுறைகள் மூடப்பட்டதாகவும் எதிரியை எதிர்த்துப் போராடுவது முடியாததாகவும் பொருத்தமான நிலைப்பாட்டை எடுக்கும் விடயத்தில் அதிகாரவர்கத்தினரிடம் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாததாகவும், வழங்கப்படும் உதவிகளை உரியவர்களுக்கு சேர்ப்பிப்பதற்கான நம்பிக்கை வாய்ந்த அமைப்புகள் கிடைக்காமையால், பண உதவி செய்வது கூட சாத்தியமற்றதாகவும் தோன்றும் போது உணர்ச்சிகள் குறைந்து வேகம் தணிந்து இன்திபாழா பற்றிய செய்திகள் கேட்பதையே பயனற்ற ஒன்றாகக் கருதுகின்ற பாதகமான ஒரு விளைவு ஏற்படுகிறது.
எனவே மேலே கூறியது போன்ற ஒரு நிலை யாருக்காவது ஏற்பட்டிருந்தால் அவர் தவறிழைத்து விடுகிறார். எதிரி அவரிடம் மிக ஆழமாக ஊடுருவி அவரை ஆக்கிரமித்துள்ளான் என்பதுதான் அதன் அர்த்தமாகும். இன்திபாழா விடயத்தில் பொதுவான செயல்பாடு இல்லாமலிருப்பினும் கூட எம்மில் ஒவ்வொருவரும் செய்ய முடிந்த, யாரும் தடுக்கவோ ஆக்கிரமிக்கவோ முடியாத பல வழிமுறைகள் இருக்கின்றன.

தினசரி வழிமுறை :
பலஸ்தீன் சகோதரர்களுக்காகவும், அல் அக்ஸாவுக்காகவும் உங்கள் நேரத்தில் ஒரு பகுதியை ஒதுக்குங்கள் அவர்களுக்காக உங்கள் தொழுகையின் போது ஸூஜூதில் பிரார்த்தியுங்கள். நீங்கள் படுக்கைக்காக அமைதியாகவும் பாதுகாப்பாகவும் தாயாராகும் நேரத்தில் அவர்களின் பயங்கரமான நிலையை எண்ணிப் பாருங்கள். சுகமாக படுக்கையில் நீங்கள் உறங்கும்போது தகர்க்கப்பட்டுள்ள அவர்களின் இல்லங்களை எண்ணிப் பாருங்கள். நீங்கள் திருப்தியாக உண்னும்போது அவர்களின் பட்டினியை எண்ணி பாருங்கள். உங்கள் குழந்தைகள் சிரித்து விளையாடும் போது அவர்களது குழந்தைகளின் அனாதரவான நிலையை எண்ணிப் பாருங்கள்.
அடுத்த சகோதரனை சந்திக்கும் போது 'நீங்கள் பலஸ்தீனுக்காக, அல் அக்ஸாவுக்காக துஆ செய்தீர்களா?' என்று கேளுங்கள். தொலைபேசியில் ஒருவருடன் கதைத்துவிட்டு 'ரீஸிவரை' வைக்கும் முன் பலஸ்தீனுக்காக துஆ செய்வதை ஞாபகபடுத்துங்கள்.
"அல்குத்ஸே! நான் உன்னை மறக்கமாட்டேன். அல் அக்ஸாவே நான் உன்னை மறவேன்" என்ற வாசங்கள் உங்களின் நிரந்தர அடையாளமாக இருக்கட்டும். "யா அல்லாஹ் ! அல்அக்ஸா தியாகிகளில் என்னையும் சேர்த்து கொள்வாயாக! அல்அக்ஸா விடுதலை பெற்று அதில் தொழும் பாக்கியத்தை எனக்கு அருள்வாயாக" என்பது உங்களின் தொடர்ச்சியான துஆவாக இருக்கட்டும். அக்ஸாவின் படத்தை உங்கள் வீட்டில் தொங்க விடுவதன் மூலம் அதனை சதாவும் நினைவுபடுத்துங்கள்.

செயல்முறை ரீதியிலான வழிமுறை :
'தினசரி வழிமுறை' மூலம் பலஸ்தீனுக்காக நீங்கள் சிந்திக்கின்ற அதே நேரம் எங்களில் ஒவ்வொருவரும் பலஸ்தீனுக்காக செயல்ரீதியான ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.
முக்கிய வைபவங்கள் போன்றவற்றுக்காக புதிய ஆடைகள் வாங்குவதை தவிர்ந்து கொள்ளல். இதன் மூலம் உங்களிடமிருப்பது போதுமானது என்பதையும் மேலதிகமாகவும் இருக்கிறது என்பதையும் கண்டுகொள்வீர்கள்.
ஆடம்பர உணவுகளுக்காக செலவு செய்வதை தவிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையற்ற பிரயாணங்களை தவிர்ந்து கொள்ளுதல்.
இவற்றிக்காக செலவுசெய்யும் பணத்தை 'இன்திபாழா'வுக்காக செலவு செய்வது எவ்வளவு மேலானது என்பதை எண்ணிப் பாருங்கள்.
நெருங்கியவர்களுக்காக கொடுக்கும் அன்பளிப்புகளைத் தவிர்ந்து கொள்ளல். இது பற்றிக் கேட்கபட்டால், 'அது உரியவருக்கு (பலஸ்தீனுக்கு) போய்விட்டது' என்று கூறுவதன் மூலம் பிறரிடத்தில் இதன் முக்கியத்துவத்தை உணரச் செய்வது.
பலஸ்தீன் குடும்பம் ஒன்றிற்க்கு மாதாந்த குடும்பச் செலவுக்காக தேவையாகும் பணத்தை தனிநபராகவோ அல்லது கூட்டாகவோ இனைந்து கொடுத்து உதவுதல். "ஒரு போராளியை யார் தயார் செய்கிறாரோ அவரும் போர் செய்தவராவர்." என்ற நபிமொழி இவ்விடத்தில் நினைவு கூரத்தக்கது.
பொருட்கள் வாங்கச் செல்லும்போது ஒரு நிமிடம் நின்று இஸ்ரேலுடைய அல்லது அதற்க்கு ஆதரவான நாடுகளின் உற்பத்திகளை வாங்கலாமா என்பதை சிந்தியுங்கள். இவ்வுற்பத்திப் பொருட்களை வாங்குவதற்காக நீங்கள் செலவு செய்யும் பணம் உங்கள் சகோதரனைக் கொல்வதற்க்காக பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். இஸ்லாமிய நாடுகள் மற்றும் பலஸ்தீன் ஆதரவு நாடுகளின் உற்பத்திப் பொருட்களை வாங்குங்கள். இதன் மூலம் மாற்றுவழி நிறைய உண்டு என்பதையும் பழக்கம், விளம்பர மயக்கம் காரணமாகவே நாம் இவற்றை வாங்கிப் பழகியிருக்கிறோம் என்பதையும் கண்டுகொள்ள முடியும்.
நாம் கூறியவற்றிக்கு வேறாகவும் பல வழிமுறைகள் இருக்கமுடியும். இவை அனைத்தையும் செயல் படுத்துவோமாயின் இன்திபாழாவில் நாமும் உணர்வுபூர்வமாக பங்கு கொள்ளமுடியும். எமது உள்ளங்களைப் பலவீனப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் சதிகளை முறியடித்து நாமும் பலஸ்தீனுக்காக பங்களிப்புச் செய்ய முடியும். இந்தளவாவது செய்ய நாம் தயார்தானா?
--- அபூ முஸ் அப்நன்றி: அல்ஹஸனாத் (டிசம்பர் - 2001)

பாபரி பள்ளிவாசலை விட்டுக்கொடுத்து விடலாமா?

நீண்ட நெடிய காலமாக பாபரி பள்ளிவாசலை மூடி வைத்து அதனுள் சிலைகளை வைத்தார்கள். அதன் பின்னர் பூஜைக்காக பள்ளிவாசலைத் திறந்து விட்டார்கள். பின்னர் பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்கினார்கள். தொடர்கின்றார்கள் அந்த இடத்தில் கோவில் கட்டும் முயற்சியை !
இத்தனை நிகழ்ச்சிகளுக்கும் உறுதுணையாய் நின்றது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு. பள்ளிவாசல் இடிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. எந்த நிவாரணமும் முஸ்லிம்களுக்குத் தென்படவில்லை.
இந்நிலையில் பள்ளிவாசலை இடித்தவர்கள் மத்தியில் ஆட்சியை பிடித்திருக்கின்றார்கள். இது முஸ்லிம்களுக்கு எந்த நிவாரணமும் இனி கிடைக்காது என்பதை ஊர்ஜிதம் செய்கின்றது.
இத்தனை அவலங்கள், முதுகில் குத்துதல், நெஞ்சில் குத்துதல், கீழவுப்புகள் அனைத்தையும் தாங்கிக் கொண்டு, என்றாவது ஒரு நாள் நியாயம் கிடைக்கும்; தங்கள் உரிமைகள் நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள், இல்லை புழுக்களாக நெளிந்து கொண்டிருக்கின்றார்கள், இன்றைய இந்திய முஸ்லிம்கள்.
முஸ்லிம்களின் இந்த நம்பிக்கையைத் தகர்த்து அவர்களை மனதளவில் பலவீனப்படுத்த வேண்டும் என்று சிலர் செயல்படுகின்றனர்.இப்படி செயல்படுபவர்கள் முஸ்லிம்களின் எதிரிகளான ஃபாசிஸ்ட்டுகளாக இருந்தால் நாம் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் அவர்களிடமிருந்து நாம் வேறெதையும் எதிர்பார்க்கவில்லை.
இப்படி செயல்படுபவர்கள் முஸ்லிம்களாக இருந்திடும்போது நாம் கவலைப்பட்டாக வேண்டியது வருகின்றது. அதிலும் அவர்கள் "இஸ்லாமிய அறிஞர்கள்" என்றும், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் என்றும் தங்களைக் காட்டிக் கொள்ளும்போது சில விளக்கங்களை தந்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றோம்.
இப்படி செயல்பட்டு வருபவர்களில் முக்கியமானவர் மௌலானா வஹ“துத்தீன் கான் அவர்கள்.
இன்று தமிழகத்தில் இவருடைய கருத்துக்களைப் பரப்புவதற்கு சிலர் முன்வந்துள்ளதால் இந்த விளக்கம் இங்கே இரட்டிப்பு முக்கியத்துவம் பெறுகின்றது.
அத்தோடு பாபரி பள்ளி வாசல் குறித்து இஸ்லாமியப் பார்வை என்ன என்பதையும் இது விளக்கி விடுகின்றது.
மௌலானா தன்னுடைய கருத்துக்களைத் தான் நடத்தும் அர்ரிசாலா என்ற பத்திரிகையில் வெளியிட்டு வருகின்றார். இந்த அர்ரிசாலா என்ற பத்திரிகையில் மே 1993 இதழில் பாபரி மஸ்ஜித் பிரச்னைக்கும் இப்படி தீர்வு சொல்கின்றார்.
"முஸ்லிம்கள், பாபரி மஸ்ஜித் மீட்புக்காக போராடுவதை நிறுத்த வேண்டும். இஸ்லாமிய ஷரீஅத்தில் அடிப்படையில் அவர்கள் இப்போது அப்படிச் செய்வது நியாயமானதே. இதில் அவர்கள் தங்கள் போராட்டங்களைத் தொடர்ந்தால் என்ன நடக்கும் என்ற பார்வையே அவர்களை வழி நடத்த வேண்டும். ஒரு காலத்தில் பாபரி பள்ளி வாசலைப் பாதுகாப்பதும், அதற்காகப் போராடுவதும் அவர்களின் கடமையாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது மாறிப்போய்விட்ட இந்தச் சூழ்நிலையில் அவர்கள் அப்படியொரு கடமையைச் சுமக்கவில்லை."
" 'சூழ்நிலைகளின் கட்டாயம்' என்ற கொள்கையின் அடிப்படையில், அவர்கள் இந்தப் பாபரி பள்ளிவாசல் பிரச்னையை விட்டு ஒதுங்கிட வேண்டும். இதனால் அவர்கள் இனிமேல் வரும் அவமானங்களிலிருந்தும் அழிவுகளிலிருந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம். "
"பாபரி பள்ளிவாசல் இடிக்கப்பட்டு விட்ட இன்றைய சூழ்நிலையில் சூழ்நிலைகள் முற்றாக மாறிப்போய்விட்டன. இதனால் நாம் இன்றைய சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் திட்டங்களை புதிதாக தீட்ட வேண்டும். சூழ்நிலைகள் மாறும்போது மார்க்கத் தீர்ப்புகளும் மாறிட வேண்டும், மாற்றிட வேண்டும் என்பது இஸ்லாத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நியதியாகும்" - அர் ரிசாலா பக்கம் 4
சூழ்நிலைகள் மாறிடும்போது, புதிதான சூழ்நிலைகள் ஏற்பட்டிடும்போது புதிதான திட்டங்கள் தீட்டப்பட வேண்டும், செயல்பாடுகள் மாற்றப்பட வேண்டும் எனப்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றுதான்.
ஆனால் மௌலானா அவர்கள் ' நீங்கள் எல்லா நடவடிக்கைகளையும் நிறுத்திட வேண்டும்' என்றல்லவா கூறுகின்றார். இனி பாபரி பள்ளிவாசலுக்காகப் போராடுவது உங்கள் மீது கடமையல்ல' என்று கூறி முஸ்லிம்களை முடக்கிப் போட்டிட அல்லவா முனைகின்றார்!
இதுதான் திட்டங்களை மாற்றுவதா?
திருக்குர்ஆன், நபிவழி ஆகியவற்றின் வழிகாட்டுதல்களுக்கு வெளியே வந்து விடாமல் நின்று கொண்டுதான் முஸ்லிம்கள் முடிவுகளை எடுக்க முடியும்; மாற்றங்களைக் கொண்டு வரமுடியும். அல்லாமல் இவை இரண்டையும் ஒதுக்கி வைத்துக் கொண்டு, வெறும் புதிய சூழ்நிலைகளை மட்டுமே கொண்டு முடிவுகளை முஸ்லிம்கள் எடுத்திட முடியாது.
மௌலானா அவர்களும், அவரது பாணியில் சிந்திப்பவர்களும் 'சூழ்நிலைகள் மாறிவிட்டதால் நீங்கள் இப்படிச் செயல்படுங்கள்' என வழிகாட்டுவதற்குப் பதிலாக ' நீங்கள் எதையும் செய்ய வேண்டாம் ' என்றல்லவா சொல்கின்றார்கள்!
இதற்கு இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களான அல்குர்ஆன், நபிமொழி ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் எதையும் சொல்லவில்லை. உண்மையில் மௌலானாவின் கருத்தை ஆதரிக்கும் அளவில் இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களில் எதுவுமில்லை என்பதே உண்மை.
ஒரு இடத்தில் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டு விட்டால் அது பள்ளிவாசலாகவே இருக்கும். அது காலாகாலத்திற்கும் பள்ளிவாசலே!
அதனை விட்டுத் தருவதற்கு முஸ்லிம்களுகே உரிமை இல்லை. இந்த உண்மையை மௌலானா அவர்களும் ஏற்றுக் கொள்கின்றார்கள். என்னதான் சூழ்நிலைகள் மாறினாலும் ஒரு பள்ளிவாசல் பள்ளிவாசலாகத்தான் இருக்கும் என்பதில் மௌலானாவிற்கு சந்தேகங்கள் இல்லாதபோது, மாறிவிட்ட சூழ்நிலையில் அதனை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?
இதற்கு மௌலானா அவர்கள் சொல்லும் காரணம், " நாம் ஒதுங்கியிருந்தால் மேற்கொண்டு வரும் அவமானங்களிலிருந்தும், அழிவுகளிலிருந்தும் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளலாம்" என்பது.
மௌலானாவின் கவனத்திற்கும் கருத்திற்கும் இன்னும் அவரைப் போல் சிந்திப்பவர்களுக்கும் ஒன்றை நாம் சொல்ல வேண்டும்.
பாபரி மஸ்ஜிதை மீட்கும் பணியில் நாம் அழிக்கப்படுவோம் என்ற அச்சம் ஏன் வந்தது?
இன்றைய ஆட்சியாளர்களோ, இதற்கு முன்னால் இருந்த ஆட்சியாளர்களோ ' நீங்கள் பாபரி பள்ளி வாசலை மீட்கப் போராடினால் நாங்கள் உங்களை அழித்து விடுவோம்" என்று சொல்லவில்லையே !
இப்படி ஒரு அச்சம் வந்ததற்கான அடிப்படையை மௌலானா அவர்கள் சொல்லவேண்டும். இல்லையேல் அடிப்படையற்ற அச்சங்களை அவர் அவனியில் திணிப்பதிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
இன்றைய ஆட்சியாளர்களும், பொதுமக்களும் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் பாபரி பள்ளிவாசலை மீட்கின்ற பணியில் நாம் யாரையும், எதையும் அழிக்கவோ, அழிக்க வழி வ்குக்கவோ கூடாது என்பதைத்தான்.
இப்படி செய்வதற்கு இஸ்லாமும் அனுமதிக்கவில்லை என்கின்றபோது இது போன்ற அழிப்புகளுக்கு இடமே இல்லை.
இவற்றையெல்லாம் கடந்து முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜிதை மீட்பதற்காக எடுக்கும் முயற்சியில் அவர்களை யாரேனும் அழித்தால் அந்த முஸ்லிம்களுக்கு அல்லாஹ் போதுமானவன்!
அவர்களை பின்வரும் இறைவசனத்தின் அடிப்படையில் அல்லாஹ் அரவணைத்துக் கொள்வான் :
அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை "இறந்தவர்கள்" என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கின்றார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகின்றார்கள். - அல் குர்ஆன் 3:169
இதில் இன்னொரு திருமறை வசனத்தையும் மௌலானா அவர்களுக்கும் அவர் பாணியில் சிந்திப்பவர்களுக்கும் சமர்ப்பிக்கின்றோம்:
"எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசித்து ஜகாத்தும் கொடுத்து வருவதுடன் அல்லாஹ்வையன்றி மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கிறார்களோ அவர்கள்தாம் அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களைப் பரிபாலனம் செய்யக் கூடியவர்கள். இத்தகையோர்தாம், நேரான வழியில் இருப்பதாக நம்பத்தகுந்தவர்கள். " - அல் குர்ஆன் 9:18
தன்னுடைய வாதத்தை வலுப்படுத்த மௌலானா அவர்கள் இன்னொரு உத்தியையும் முன் வைக்கின்றார்.
"இஸ்லாம் பயன்படக்கூடிய செயல்களை செய்யும்படிதான் தூண்டுகின்றது. பலன் பயக்காத செயல்களை செய்வதற்கு இஸ்லாம் ஒருபோதும் தூண்டவில்லை" - அர் ரிசாலா
இப்படி மௌலானா சொல்வதன் விரிந்த பொருள் - பாபரி பள்ளிவாசலைக் கட்டுவது என்பது அல்லது அரசு வாக்களித்தபடி கட்டித் தருவது என்பது நடக்கப் போவதில்லை. அப்படி இருக்க அந்தத்திசையில் எடுக்கப்படும் முயற்சிகள் பலன் அற்றவை என்பதே!
இப்படியொரு நிராசைக்கும் - பின்னர் விரக்திக்கும் மௌலானா அவர்கள் வருவதற்கு என்ன காரணம் என்பதை நாமறியோம். மௌலானா அவர்களும் இதற்கு எந்தக் காரணத்தையும் சொல்லவில்லை.
அடுத்து இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது என்பதற்கு மௌலானா அவர்கள், திருக் குர்ஆனி லிருந்தோ, நபி வாழ்விலிருந்தோ இஸ்லாமிய வரலாற்றிலிருந்தோ எந்த ஒரு ஆதாரத்தையும் எடுத்துக்காட்டவில்லை.
மௌலானா அவர்கள் இந்தியாவில் முஸ்லிம்களுக்கெதிராக சூல்கொண்டலையும் திட்டங்களையும் தீவிரவாதங்களையும் கண்டு அரண்டு போய் இருக்கிறார் என்பதையே தெளிவு படுத்தியிருக்கின்றார்.
விழலுக்கு நீர் இறைப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. ஆனால் அநியாயத்தைத் தடுத்து நிறுத்துவதையும் எதிர்த்துப் போராடுவதையும் இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. இது திருக்குர்ஆனின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் நாம் பெறும் பயனுள்ள பாடம்.
இந்த கடமையை நிறைவேற்றுவதில் நாம் இந்த உலகில் வெற்றிகளைக் குவிக்காவிட்டாலும், நிச்சயமாக இந்த வகையில் நாம் எடுத்து வைக்கும் சிறிய முயற்சிகளிலிருந்து பெரிய முயற்சிகள் வரை அனைத்திற்கும் மறுமையில் நற்கூலி உண்டு!. இன்னும் சொன்னால் ஈமானின் கடைசிப்படி - அநியாயத்தை மனதளவிலாவது வெறுப்பதுதான்.
இன்னும் மௌலானா அவர்கள் பின்வரும் இறைவசனங்களை ஆழ்ந்து கவனிப்பது நல்லது :
(நபியே!) கடற்கரை ஓரத்திலிருந்த ஓர் ஊர் மக்களைப் பற்றி அவர்களைக் கேளும். (ஓய்வு நாளாகிய) சனிக்கிழமையன்று (மீன் வேட்டையாடக் கூடாது என தடுக்கப்பட்டிருந்தும்) அவர்கள் வரம்பு மீறி (மீன் வேட்டையாடிக்) கொண்டிருந்தார்கள். ஏனென்றால் சனிக்கிழமையல்லாத நாள்களில் அவர்களிடம் (அவ்வாறு) அவை வருவதில்லை. அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை இவ்வாறு கடினமான சோதனைக்குள்ளாக்கினோம்.
இதனை அவ்வூரிலிருந்த நல்லோர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து தடை செய்தார்கள். இதனைக் கண்ட அவர்களில் ஒரு கூட்டத்தினர் இவர்களை நோக்கி, ''அல்லாஹ் எவர்களை அழித்து விட வேண்டுமென்றோ அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்க வேண்டுமென்றோ ( நாடி ) இருக்கின்றானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுபதேசம் செய்கின்றீர்கள்?'' என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் இதனால் நாம் உங்கள் இறைவனிடம் பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காக நாங்கள் நல்லுபதேசம் செய்கின்றோம். அதனால் மீன் பிடிக்கும் அவர்கள் (ஒருக்கால்) விலகிவிடலாம் என்றும் கூறினார்கள்.
அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டதை அவர்கள் (பொருட்படுத்தாது) மறந்து பின்னும் மீன் பிடிக்க முற்படவே, பாவத்திலிருந்து விலகி வந்தவர்களை நாம் இரட்சித்துக் கொண்டு, வரம்பு மீறியவர்களை அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக கொடிய வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டோம்." - அல் குர்ஆன் 7:163-165
இந்த வரலாறு நமக்கோர் உண்மையை உணர்த்துகின்றது.
அநியாயத்தை செய்பவர்களை - வரம்பு மீறுபவர்களை நாம் பார்த்துக்கொண்டிருந்தால் அல்லாஹ் நம்மைச் சும்மா விடமாட்டான். நாம் அநியாயத்தை தடுக்க நம்மால் முடிந்ததையெல்லாம் செய்வது, நாளை மறுமையில் இறைவனிடம் நமது பொறுப்பை நாம் நிறைவேற்றினோம் என்பதை நிரூபிக்கவே! அல்லாஹ்வின் நாமம் துதிக்கப்பட்ட இடத்தை இணைவைப்போர் ஆக்கிரமிப்பதும், தீவிரவாதிகள் இடிப்பதும், நாம் பார்த்துக் கொண்டிருப்பதுமா? இல்லை. நிச்சயமாக இல்லை. அல்லாஹ்வை " ஸஜ்தா " செய்த இடத்தை மீட்க உளத்தூய்மையோடு எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சிக்கும் அல்லாஹ் நிரம்ப நற்கூலிகளை நல்கிடவே செய்வான் - மறுமையில்.
இந்த உலகில் எதிர்ப்படும் சிரமங்களைத் தாங்கிக் கொண்டு மறுமையை மனதில் கொண்டு வாழ்பவர்கள் உண்மையான அல்லாஹ்வின் அடியார்களல்லவா? இவர்கள்தானே மார்க்கத்திற்கு உண்மையான சாட்சியங்களாக வாழ்பவர்கள். பள்ளிவாசல்கள் அல்லாஹ்வின் இல்லங்கள். அவற்றைச் சிதைப்பதும் இடிப்பதும் மன்னிக்க முடியாத குற்றங்கள். இறைவன் இதை இப்படி சுட்டிக்காட்டுகின்றான்:
அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அவனுடைய நாமத்தைத் துதி செய்வதைத்தடுத்து அவற்றைப் பாழாக்க முயற்சி செய்பவனை விட மகா அக்கிரமக்காரன் யார்? - அல் குர்ஆன் 2:114
இங்கே இந்தியாவிலும், பள்ளிவாசலுக்குள் சிலைகளை வைத்தவர்கள் மீதும் பின்னர் அதை இடித்தவர்கள் மீதும் கிரிமினல் வழக்குகள் தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. யதார்த்தங்கள் இப்படி இருக்கவே, மௌலானா அவர்கள் ஏன் இப்படி நடுங்குகின்றார்கள்? மௌலானா அவர்கள் இன்னொரு வாதத்தையும் இங்கே முன் வைக்கின்றார்கள்.
அது , " டிசம்பர் 6,1992 வரை பள்ளிவாசலைப் பாதுகாப்பதே நமக்கு மிக முக்கியமான கேள்வியாக இருந்தது. பள்ளிவாசல் இடிப்பிற்குப் பின் முஸ்லிம்களின் உயிரும், ஜ“விதமும் கேள்விக்குறியாகி விட்டது. ஆகவே இப்போது முஸ்லிம்களின் உயிர்களைக் காப்பதற்கே அதிக முக்கியத்துவம் தரப்படவேண்டும்" என்பதாகும்.
மௌலானா அவர்களும் அவர்களின் கருத்துகளை விதைக்க விரும்புவோரும் ஒரு உண்மையை உணர்ந்து கொள்ளவில்லை! முஸ்லிம்களின் உயிரும், உடைமைகளும் ஆண்டாண்டு காலமாக இங்கே ஆபத்துக்களையும் அழிவுகளையும் சந்தித்தே வந்திருக்கின்றன. நாளொன்றுக்கு ஒரு வகுப்புக்கலவரம் ; அதில் முஸ்லிம்களின் உயிர்கள் நூற்றுக்கணக்கில் சேதம் ; திட்டமிட்டு அவர்கள் பொருளாதாரத்துறையில் அழிக்கப்பட்டார்கள் என அழுத்தமாகப் பேசுகின்றன ஆதாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள்.
இந்நிலையில் பாபரி பள்ளிவாசல் இடிப்பிற்குப் பின்னர்தான் முஸ்லிம்களின் உயிர்களும் உடைமைகளும் ஆபத்திற்குள்ளானது என்பது வரலாறு மறந்த பயமும் பீதியுமாகும்.
பாபரி மஸ்ஜிதை இடித்தவர்களின் பட்டியலில் இன்னும் 3000 பள்ளிவாசல்கள் இருக்கின்றன என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது. ஆகவே மௌலானா அவர்கள் காலாகாலத்திற்கும் கதிகலங்கியே வாழ வேண்டியிருக்கும். ஆமாம்! நமக்கு மத்திய, மாநில அரசுகளும் அவற்றிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இருக்கும்போது மௌலானா ஏன் நடுநடுங்குகின்றார்கள்?
இந்த அரசமைப்புகள் நம்மைப் பாதுகாக்காது என அவர்கள் எண்ண ஆரம்பித்து விட்டார்களா? அரசு இயந்திரங்களில் அவர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்றால் அதை அவர்கள் அப்படியே அறிவிக்கட்டுமே...! வரலாறு நெடுகிலும் முஸ்லிம்கள் அல்லல்களுக்கு ஆட்பட்டு வந்திருக்கின்றார்கள்! அவற்றில் ஒன்றுதான் முஃமின்கள் நெருப்புக்குண்டத்தில் எறியப்பட்டு அவர்கள் எரிக்கப்பட்ட வரலாறு. இத்தனைக் கொடுமையான தண்டனையைப் பெறும் அளவுக்கு அவர்கள் அப்படி என்ன தவறைச் செய்துவிட்டார்கள்? அல்லாஹ்வே அதைக்கூறுகின்றான் :
விசுவாவாசங்கொண்ட அவர்களில் யாதொரு குற்றத்தையும் அவர்கள் காணவில்லை. எனினும், மிக்கப் புகழுடையோனும் யாவரையும் மிகைத்தோனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் விசுவாசித்ததையன்றி (ஈமான் கொண்டதையே அவர்கள் குற்றமாகக் கண்டார்கள். ) - அல்குர்ஆன் 85:8
ஃபைஸாபாத்தில் பா.ஜ.கவின் முக்கியப் பொறுப்பைச் சுமந்த ஒரு முஸ்லிம் கோரமான வகையில் கொலை செய்யப்பட்டார் என்பது உண்மையாக இருக்கும்போது வஹ“துத்தின் அவர்களது வாரிசுகள் எங்கே ஓடப்பார்க்கின்றார்கள்? கஷ்டங்களுக்கிடையேயும் நாம் உறுதியாக நின்றால் அல்லாஹ் நம்மை நிலைப்படுத்தி வைப்பான் என்ற அல்லாஹ்வின் உறுதிமொழிகள் நம்மை வழி நடத்தட்டும்.
"விசுவாசிகளே ! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிந்தால் அவனும் உங்களுக்கு உதவி புரிந்து உங்களுடைய பாதங்களை உறுதியாக்கி வைப்பான்." - அல் குர்ஆன்- 47:7
இன்னொன்றையும் இங்கே நினைவு கூர்வோம் :
(விசுவாசிகளே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்வோர் ஒருவருமில்லை! உங்களை அவன் (கை) விட்டு விட்டாலோ, அதற்குப் பின்னர், உங்களுக்கு எவர்தான் உதவி செய்ய முடியும்? ஆதலால் அல்லாஹ்வின் மீதே விசுவாசிகள் நம்பிக்கை கொள்ளட்டும்.
இன்னும் அல்லாஹ் தன் திருமறையில் இப்படிக் குறிப்பிடுகின்றான்:
இவர்கள் (எத்தகையவர்கள் என்றால்) நியாயமின்றி தங்கள் வீடுகளிலிருந்து (விரோதிகளால்) துரத்தப்பட்டவர்கள். எங்களுடைய இறைவன் அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறியதுதான் இவர்கள் செய்த குற்றம்! மனிதர்களில் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருந்தால், கிறிஸ்தவர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வுடைய திருநாமம் அதிகமாகத் துதிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டே போயிருக்கும். அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கின்றானோ, நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுக்கு உதவி செய்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க பலவானும் யாவரையும் மிகைத்தோனுமாக இருக்கின்றான். - அல் குர்ஆன் - 22:40
- நன்றி : குலாம் முஹம்மது , இலக்கியச் சோலை.

பாபரி மஸ்ஜிதுக்காக உங்களின் பங்களிப்பு என்ன?

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்



அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித்துதிப்பதைத் தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார்? திருக் குர்ஆன் 2:114
அன்புச் சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு,
நீங்கள் ஒரு தனி நபராகவோ ஒரு மக்கள் குழுவினராகவோ இருக்கலாம். மனித சமுதாயத்திற்கு சிந்தனைச் சுதந்திரத்தையும் சிறப்பு அந்தஸ்தையும் கொடுப்பதற்காக, அதனை பல தெய்வக்கொள்கையிலிருந்து விடுவிக்கும் நோக்கத்துடன், மஸ்ஜிதுகள் நிறுவப்படுகின்றன. இவ்வாறு நிறுவப்பட்டு ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்குப் பின் பாபரி மஸ்ஜித் 1992ம் ஆண்டு டிசம்பர்
6ந் தேதி ஹிந்துத்துவ வெறியர்களால் இடிக்கப்பட்டது. பாபரி மஸ்ஜிதை புனர் நிர்மாணம் செய்வதற்கு நீங்களும் பல்வேறு வழிகளில் பணியாற்றலாம்!
உங்களின் சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் இதோ சில ஆலோசனைகள்:

1. துஆ
பாபரி மஸ்ஜிதை அதே இடத்தில் திரும்பவும் கட்டியெழுப்புவதற்கான தேவைகளை நிறைவேற்ற முஸ்லிம் உம்மத்திற்கு உதவி அருளுமாறு எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலாவிடம் துஆ (பிரார்த்தனை) செய்யுங்கள். இதற்கு எதுவும் செலவாகாது, இதற்காக பொது அறிக்கைகள் எதுவும் தேவையில்லை. தினந்தோறும் உங்கள் துஆக்களில் பாபரி மஸ்ஜிதை நினைவுபடுத்திக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

2. உண்மைத் தகவல்களை படியுங்கள்; அதனைப் பற்றி எழுதுங்கள்.
பாபரி மஸ்ஜித் சோக நிகழ்ச்சி பற்றி உங்களுக்கு தெரியாமலிருந்தால், அதைப் பற்றி வாசித்தறியுங்கள். ஷரீஅத்தில் மஸ்ஜித்களின் அந்தஸ்து பற்றியும், பாபரி மஸ்ஜிதின் நிர்மாணம் முதல் நிர்மூலம் வரையிலான வரலாறு பற்றியும் அறியலாம்; இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் (இந்திய முஸ்லிம்களின் சம்மேளனம்) என்ன நிலை எடுத்துள்ளது என்பது பற்றி தெளிவடையலாம். இந்துத்துவ சக்திகள் முதலில் அதனை அடையாளப்படுத்தி, அதன் பின்னர் முழு உலகிற்கும் முன்னிலையிலும் அதனை சுக்கு நூறாக தரைமட்டப்படுத்தியது ஏன் என்பது பற்றி அறிய முயலுங்கள். இது அதனை அதே இடத்தில் மீண்டும் நிர்மாணம் செய்வதே மிக முக்கியமாகும் என்பதைப் பற்றிய தெளிவான விளக்கத்தை உங்களுக்கு தரும்.
இந்திய அரசின் பாதுகாப்பின் கீழ், பாபரி மஸ்ஜிதின் மையப் பகுதியில் ராமர் சிலைகளுக்கு வழிபாடு நடத்தப்பட்டு வந்தாலும், பாபரி மஸ்ஜித் இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கு சட்டரீதியாகவும், சரித்திரரீதியாகவும் எந்த ஓர் ஆதாரமுமில்லை. மஸ்ஜிதை இடித்த கரசேவகர்கள் விசேஷ ரயில்களில் தத்தம் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்பதும் முக்கிய குற்றவாளிகள் இன்று அரசியல் அதிகாரம் பெற்று வலம் வருகிறார்கள் என்பதும், அதே நேரத்தில் இந்த மனிதாபிமானமில்லாத அக்கிரமத்திற்கெதிராக அமைதி வழியில், சட்டத்திற்குட்பட்டு வீதிகளில் குழுமி கண்டனம் தெரிவித்த முஸ்லிம்கள் ஏறத்தாழ 2000 பேரை காவல்துறை சுட்டுக் கொன்றதும் அப்பட்டமான உண்மைகளாகும்.

3. நீங்கள் வாழும் பகுதிகளிலுள்ள மஸ்ஜித்களில் நிகழ்ச்சிகள் நடத்தலாம்.
முஸ்லிம்களில் பலதரப்பட்டவர்கள் ஒரே சமயத்தில் மஸ்ஜிதில் ஒன்று கூடுவது வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகைக்குத்தான் என்பதால், குத்பா பிரசங்கத்தைப் பயன்படுத்தி, பாபரி மஸ்ஜித் பற்றி விளக்கி கூறலாம்; இயன்ற வழிகளில் பாபரி மஸ்ஜித்துகாக அவர்கள் ஆதரவைக் கோரலாம்.

4. ஊடகங்கள் மூலம் உண்மைச் செய்தியை உலகறியச் செய்யுங்கள்:
பாமர மக்களுக்கு வரும் செய்திகள் எல்லாம் பக்கச் சார்புள்ள இஸ்லாத்திற்கு எதிரான செய்தி ஊடகங்கள் மூலமாக வரும் உண்மைக்கு மாறான திரிக்கப்பட்ட செய்திகள்தான். இந்த நிலையில், பாபரி மஸ்ஜிதின் உண்மை நிலையை மக்கள் முன் எடுத்து வைக்க கடமைப்பட்டுள்ளோம். இதற்கு எலக்டிரானிக்/அச்சு ஊடகங்களில் பணியாற்றும் உணர்வுள்ள முஸ்லிம்கள் முன்வர வேண்டும். இணையத்தின் மூலம் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதாருக்கும் பாபரி மஸ்ஜித் உண்மை நிலையை எடுத்துச் சொல்லி அவர்களின் ஆதரவைக் கோரலாம்.

5. உங்கள் ஊர்களில்/ நகரங்களில் "பாபரி மஸ்ஜித் புனர் நிர்மாணக் குழுக்களை" நிறுவுங்கள்:
பாபரி மஸ்ஜிதைப்பற்றி மக்களுக்கு அறியத்தருவதற்கும், ஹிந்துத்துவ சக்திகளின் அக்கிரமங்களால் பாதிக்கப்பட்ட உங்கள் பகுதியிலுள்ள முஸ்லிம்கள் தார்மீக ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் இக்குழுக்கள் பயன்படும். கருத்தரங்குகள், பொது நிகழ்ச்சிகள், நிதி சேகரிப்பு, கல்வி நிறுவனங்களில் இது தொடர்பான கூட்டு நிகழ்ச்சிகள், செய்தி மடல்கள் வாயிலாக சமுதாயத்தினருக்கு விழிப்பூட்டுங்கள்.

6. பொது மக்கள் அபிப்ராயத்தை உருவாக்குங்கள்:
மனித உரிமை குழுக்கள், அரசியல் கட்சிகள், திறந்த மனதுள்ள முஸ்லிமல்லாத குழுக்கள் போன்றவர்களுடன் தொடர்பு கொண்டு பாபரி மஸ்ஜித் விவகாரத்தைப்பற்றிய கருத்தோட்டத்தை அவர்கள் மத்தியில் உண்டாக்குவது முஸ்லிம்களின் பொறுப்பாகும். கருத்தொற்றுமை கொண்டவர்களுடன் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிகள் நீதி வேண்டி போராடும் முஸ்லிம்களுக்கு வலுவைக் கொடுக்கும்.

7. ஹிந்துத்வ சக்திகள் மத்தியில் அழைப்புப்பணி:
"தேசிய அளவில் மிகப்பெரும் சோக நிகழ்ச்சியான பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு நீங்கள் தான் பொறுப்பாகும். உங்களின் சதித்திட்டத்தின் காரணமாக நீதிக்குப் புறம்பான செயலை நீங்கள் செய்ததாக இந்திய முஸ்லிம்கள் உறுதியாக நம்புகிறார்கள். மரணத்திற்கு பின் வரும் மறுமை நாளில் இறைவனின்," எந்த உரிமையையும், அனுமதியையும் கொண்டு இஸ்லாத்தின் அடையாளமாகிய மஸ்ஜிதை இடித்தீர்கள் ? எனது அடியார்களைக் கொன்று குவித்தீர்கள்?" என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்பதையும் அவர்களுக்கு எச்சரிக்க வேண்டும். குருட்டு குறிக்கோள்களுக்கு பாடுபடுவதை விடுத்து, எங்களையும்,உங்களையும் படைத்த எல்லாம் வல்ல இறைவன் பக்கம் திரும்புங்கள் என்ற செய்தியை அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் நூல்களை அவர்களுக்கு அளிக்க வேண்டும். அவர்களின் நேர்வழிக்காக தினமும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.

8. முஸ்லிம் சமுதாயத்தினருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்:
முஸ்லிம்கள் உறுதியாக நின்று அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் மென்மையான குறிக்கோளற்ற அணுகுமுறையைக் கையாண்டால்,அது இந்தியாவில் அமைதியை நிலவச் செய்யும் எனப் பலர் நம்புகின்றனர். அவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் - என்னவென்றால் அல்லாஹ்வின் அருளால் ஜிஹாத் உணர்வுதான் அவர்கள் ராமர் கோவில் கட்டுவதையும்,ஏனைய மஸ்ஜித்களை தாக்கி அழிப்பதையும்,முஸ்லிம்களை தாக்குவதையும் விட்டு யோசிக்க வைத்திருக்கிறது. இத்தருணத்தில் இவ்விவகாரத்தில் நாம் தளர்வு காட்டினோமென்றால், ஹிந்துத்துவ சக்திகள் தங்கள் அநீதிகளையும், அக்கிரமங்களையும் மறுபடியும் கட்டவிழ்த்து விடுவதற்கு உற்சாகமளிப்பதாய் அமைந்து விடும். எனவே எந்நேரமும் விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.
அல்லாஹ்வின் மீது மட்டும் முழு நம்பிக்கைவைத்து, அல்குர்ஆன், அல்ஸூன்னாவின் வழி காட்டுதலின் அடிப்படையில் நாம் உறுதிப்பாட்டுடனும் உத்வேகத்துடனும் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு நமது கருத்தை நிறுவதற்காக மனப்பூர்வமாகவும், மன உறுதி தளராமலும் உழைப்பது மட்டுமே பாபரி மஸ்ஜிதை மீண்டும் புனர் நிர்மாணம் செய்யலாம்!இம்மை மறுமை வெற்றியை அடையலாம்!
முஸ்லிம்களே நாம் விடாமல் நீதிக்காகப் போராடுவோம்.!
அல்லாஹ்வின் ஆணையை ஏற்றுச் செயல்படுவோம்.!
இஸ்லாத்தையும், இஸ்லாத்தின் அடையாளங்களையும் பாதுகாக்கவிடப்படும் அழைப்பிற்குத் தயாராக இருப்போம்.
“அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன.எனவே அவற்றில் அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள் “அல்குர்ஆன் 72:18

பாதையும் பயணமும்

படைப்பின் நோக்கம்
இப்பிரபஞ்சத்தையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்த பேரருளாளனின் படைப்புகள் அனைத்திற்கும் பின்னால் ஒரு நோக்கம் இருக்கிறது. “மனிதர்களையும் ஜின்களையும் என்னை வணங்குவதற்காகவே தவிர வேறொன்றுக்கும் படைக்கவில்லை “(திருக்குர் ஆன் 51 : 56) என்று இறைவன் திருமறையில் குறிப்பிடுவது போல் மனிதர்கள் படைக்கப்பட்டதன் நோக்கம் தங்களை படைத்த இறைவனை அறிந்து, அவனை வணங்கவும் அவனுடைய கட்டளைகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டு, அவனுடைய கட்டளைகள் இப்பூமியில் நிலைபெற பாடுபடுதலேயாகும்.
செயல்களில் சிறந்தவர் யார் என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு நாம் வாழ்வையும் மரணத்தையும் படைத்தோம்” என அல்லாஹ் கூறுகின்ற படி நம் வாழ்வின் நோக்கமே நம் அதிபதி நம்மை படைத்த நோக்கத்தை அறிந்து, அவனுடைய கட்டளைக்கு ஏற்ப வாழக் கூடிய மக்களாக மாற வேண்டும். இறைவனின் பேரருளால் நாம் அனைவரும் முஸ்லீம்களாக இருக்கிறோம். ஏனென்றால் நாம் முஸ்லீமாக இருப்பது அல்லாஹ்வின் மாபெரும் அருளாகும். மனிதர்களில் புனிதர்களான நபிமார்களின் உறவுகளுக்கு முஸ்லீமாக வாழக் கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை. நபி நூஹ் (அலை) அவர்களின் மகன், நபி லூத் (அலை) அவர்களின் மனைவி, நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் தந்தை, ஏன் நமது உயிரினும் மேலான முஹம்மது (ஸல்) அவர்களின் தந்தைக்கு கிடைக்காத பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கிறான்.
முஸ்லீமாக உள்ள ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளல், ஐவேளை தொழுதல், நோன்பு நோற்றல், அவர்களின் பொருளாதார சக்திக்கேற்ப ஜகாத் கொடுத்தல், ஹஜ் செய்தல் ஆகியவை கண்டிப்பாக செய்ய வேண்டிய கடமை என்பதை நாம் அனைவரும் தெரிந்திருக்கிறோம். ஆனால் ஒரு சமூகமாக நாம் செய்ய வேண்டிய கடமையை பற்றி திருமறையில் கீழ் காணும் வசனத்தில் இறைவன் குறிப்பிட்டு காட்டுகிறான் : “நம்பிக்கையாளர்களே ! நீங்கள் தான் மனிதர்களில் தோற்றுவிக்கப்பட்டவர்களில் மிகச் சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் மனிதர்களை நன்மையான காரியங்களை செய்யும் படி ஏவி, தீமையான காரியங்களிலிருந்து அவர்களை விலக்கி அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறீர்கள்” (திருக்குர்ஆன் 3 : 110) .

முஸ்லீம் என்றால் ?
முஸ்லீம் எனும் சொல்லுக்கு கட்டுபட்டவன் என்று நேரடியாக பொருள்படும். நாமும் கட்டுபட்டவர்களாக தான் இருக்கிறோம். யாருக்கு என்பதில் தான் தவறு செய்யக் கூடியவர்களாக இருக்கிறோம். நம்மில் சிலர் நம் தலைவர்களுக்கு, முன்னோர்களுக்கு, மனிதனின் மனோ இச்சைகளுக்கு, மனித சபலங்களுக்கு அடிமைப்பட்டு கிடக்கிறோம். இஸ்லாமோ முஸ்லீமை எல்லாவித அடிமைத்தனங்களிலிருந்தும் விடுதலை செய்து இறைவனுக்கு மட்டும் முழுமையாக கட்டுபட்டவர்களாக ஆக்கவே விரும்புகிறது. இறைவனும் திருமறையில் ”அல்லாஹ்வுடைய நேரான வழியை விட்டும் தன் மனோ இச்சையை பின்பற்றுபவனை விட வழி கெட்டவன் எவனுமுண்டா?” (திருக்குர் ஆன் 28:50) என்று கேள்வி எழுப்புகிறான்.
“நம்பிக்கையாளர்களே ! நடுநிலை சமுதாயமாக உங்களை நாம் ஆக்கினோம், நீங்கள் பிற மனிதர்களுக்கு சாட்சியாக இருப்பதற்காகவும், நம்முடைய தூதர் உங்களுக்கு சாட்சியாக இருப்பதற்காகவும்” என்று இறைவன் திருமறையின் 2:143-ல் சொல்லிக் காட்டுகின்ற படி நாம் நம்முடைய சொல்லாலும், செயலாலும் இம்மார்க்கத்திற்கு சாட்சியாளர்களாக விளங்க வேண்டும். நபி (ஸல்) அவர்களின் வாழ்வை பற்றி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது எப்படி அவர்களின் வாழ்வு திருக்குர்ஆனாக இருந்தது என்று சொன்னார்களோ அது போல் நம்முடைய சொல், சிந்தனை, எழுத்து, பணி, போராட்டம், ஒன்றுகூடல் என அனைத்துமே குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் அமைய வேண்டும். சுருங்க சொன்னால் நாம் நடமாடும் திருக்குர்ஆனாக, திருக்குர்ஆனின் விளக்கவுரைகளாக திகழ வேண்டும். நம் ஓட்டு மொத்த வாழ்வும் பெருமானார் (ஸல்) அவர்கள் உருவாக்கிய வழித்தடத்திலேயே அமைய வேண்டும்.

நபிகளாரின் பயணம்
மனிதர்களை வழிநடத்த இறைவன் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு நபிமார்களை வெவ்வேறு பிரதேசங்களுக்கு அனுப்பினாலும் அனைவரும் ”அல்லாஹ்வை தவிர வேறு யாரும் வணங்காதீர்கள்” என்ற ஓரே அடிப்படை செய்தியை தான் சொன்னார்கள். எனவே எல்லோரின் அடிப்படை நோக்கமும் இறைவனுக்கு முற்றிலும் கட்டுபடக் கூடிய மக்களை உருவாக்குவதாக தான் இருந்தது. நபி (ஸல்) அவர்களும் தன் தூதுத்துவ பயணத்தில் முதலில் தனிப்பட்ட நபர்களை தூய்மைப்படுத்தி, அவர்களின் பண்புகளை செம்மைபடுத்தி அவர்களை செதுக்குகின்ற வேலையை தான் செய்தார்கள். அதன் பிறகு அந்த தனிப்பட்ட நபர்களை கொண்டு நன்மையை ஏவி, தீமையை தடுக்கின்ற குர் ஆனின் படி வாழும் ஒரு ஒப்பற்ற சமூகத்தை சமைத்தார்கள். அதன் தொடர்ச்சியாக தீனை மேலோங்க செய்யும் விதமாக இஸ்லாமிய ஆட்சியை நிறுவினார்கள்.
இஸ்லாத்தின் அடிப்படையிலான ஆட்சி நிலைபெறும் போது தான் தீன் முழுமைப்படுத்தப்படும் என்பதை அல்லாஹ்வின் தூதர் நன்றாக உணர்ந்திருந்ததால் தான் அதை இலக்காக கொண்டே அவரது பாதையின் ஒவ்வொரு எட்டும் இருந்ததை ஸீராவை ஆழமாக படித்தால் உள்வாங்கி கொள்ளலாம். அதிகாரம் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் அஞ்சுபவர்களின் கையில் கொடுக்கப்படும் போது தான் தவ்ஹீதை கூட ஒரு மனிதனால் முழுமையாக கடைப்பிடிக்க முடியும். அவ்வாறு இல்லையென்றால் நம் வாழ்வின் பெரும்பகுதி தவறான சட்ட திட்டங்களுக்கு பலியாகி நம் வாழ்வின் சிறிய பகுதியில் மட்டுமே அல்லாஹ்வின் அடிமைகளாக இருக்க முடியும், அதுவும் அரசு அனுமதி கொடுக்கும் வரையில் மட்டுமே. உதாரணத்துக்கு நீதி வழங்குதல், அமைதியை ஏற்படுத்துதல் போன்றவை ஓர் அரசால் மட்டுமே முடியும். தனி மனிதனாகிய நம்மால் அதிகபட்சம் மது அருந்தாமல், விபசாரம் செய்யாமல் இருக்கலாமே தவிர அவைகளை முற்றிலும் ஒழிப்பது என்பது ஓர் அரசாங்கத்தால் மட்டுமே முடியும். எனவே ஒரு மனிதன் இஸ்லாமிய அடிப்படையில் வாழ ஆசைப்பட்டால் அதற்கேற்ற சூழ்நிலையை ஒரு இஸ்லாமிய அரசால் மட்டுமே ஏற்படுத்த முடியும்.

தீனை மேலோங்க செய்யல்
அவன் தான் தன்னுடைய தூதரை நேரான வழியைக் கொண்டும், உண்மையைக் கொண்டும் அனுப்பி வைத்தான். இணைவைத்து அவர்கள் வெறுத்த போதிலும் எல்லா மார்க்கங்களையும் அது மிகைத்தே தீரும் என்று திருமறையின் 61 : 9 –ல் எல்லாம் வல்ல இறைவன் குறிப்பிடுவது போல் அவன் தன்னுடைய தூதரை அனுப்பியதின் நோக்கம் தீனை முழுமைப்படுத்துதல் என்பதை தெளிவாக உணரலாம். இதை மேலும் வலுப்படுத்தும் செய்தியை பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்வில் நாம் காணலாம். நபி (ஸல்) அவர்கள் சத்திய இஸ்லாமிய பிரசாரத்தை மக்கத்து மண்ணில் முழு வேகத்துடன் எடுத்து சென்ற போது அதை தடுத்த நிறுத்த எத்தனையோ வழி முறைகளை கையாண்டு தோற்று போன குறைஷிகள் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு சமரசத் திட்டத்தை கொண்டு வருகின்றனர். இப்பிரசாரத்தை பெருமானார் அவர்கள் நிறுத்தி விட்டால் அதற்கு பகரமாக மக்காவில் உள்ள அழகான பெண்ணை மணமுடித்து கொடுப்பதாகவும் அல்லது செல்வக்குவியலையே அளிப்பதாகவும் அல்லது மக்கத்து ஆட்சியை கொடுப்பதாகவும் பேரம் பேசினர். அப்பேரத்துக்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த பதில் வரலாற்றில் வைர எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது என்றால் அது மிகையான ஒன்று அல்ல. நபி (ஸல்) அவர்கள் தீர்க்கமாக சொன்னார்கள் “ இந்த குறைஷிகள் என்னுடைய ஒரு கையில் சூரியனையும் ஒரு கையில் சந்திரனையும் கொடுத்தாலும் இந்த பணியை நான் விட மாட்டேன். ஒன்று அப்பாதையிலே என்னுடைய உயிர் போக வேண்டும் அல்லது இந்த தீன் இவ்வையகத்திலே மேலோங்க வேண்டும்”.
மேற்காணும் குர்ஆன் மற்றும் ஹதீஸின் விளக்கத்தின் அடிப்படையில் சிந்தித்து பார்த்தால் நபி (ஸல்) அவர்கள் சென்ற பாதையின் இலக்கு தீனை மேலோங்க செய்வதே என்பதை நன்கு உணர்ந்து கொள்ளலாம். ஒரு கொள்கை வெற்றி பெற வேண்டுமானால் அதை எதிர்க்கும் பிற கொள்கைகள் வீழ்த்தப்பட வேண்டும் என்பதை அனைவரும் அறிவோம். இஸ்லாம் அல்லாத அனைத்து கொள்கைகளும் இஸ்லாத்துக்கு எதிரானவையே. இஸ்லாத்தின் தாரக மந்திரமான லாயிலாஹ இல்லல்லாஹ் என்பது வெறும் சொல்லல்ல. வெறும் சொல்லாக இருந்தால் வானங்களையும் பூமியையும் படைத்தது அல்லாஹ் என்று நம்பிக்கை கொண்ட குறைஷிகள் நிச்சயம் இவ்வளவு தீவிரமாக எதிர்த்திருக்க மாட்டார்கள். மாறாக லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் இனி செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தை கொண்டு ஏழைகளை அடிமைப்படுத்த முடியாது, கோத்திரத்தின் பெயரை சொல்லி எளியவர்களை சுரண்ட முடியாது, அனைத்து அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமாகி விடும் என்பதை நன்கு உணர்ந்த காரணத்தால் தான் எதிர்த்தார்கள்.
தீனை மேலோங்க செய்யும் பணிக்காக தூதரை அனுப்பியதாக சொல்லும் இறைவன் அப்பாதையில் செல்ல துடிக்கும் முஸ்லீம்களுக்கு அதற்கான வழியையும் அடுத்தடுத்த வசனங்களில் சொல்லிக் காட்டுகிறான். அழகான வியாபாரத்துக்கு அதனை ஒப்பிட்டு விட்டு தீனை மேலோங்க செய்ய ஆசைப்படுபவர்கள் முதலில் அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும் நம்பிக்கை கொள்வதோடு இப்பாதையில் தங்களது பொருட்களையும், உயிர்களையும் கொண்டு போராட வேண்டும். ஏனென்றால் நபிமார்கள், ஸஹாபாக்கள் கடந்து சென்ற இப்பாதை மலர்கள் தூவிய மென்மையான பாதையல்ல. நபி (ஸல்) அவர்களை பார்த்து ஒரு மனிதர் நான் தங்களை நேசிக்கிறேன் என்று சொன்ன போது பெருமானார் சொன்ன பதில் நம்மை இப்பாதையில் பயணிப்பதின் கடினத்தை உணர்த்துகிறது. நபி (ஸல்) அவர்கள் சொன்னது என்னவென்றால் அப்படியென்றால் பசி பட்டினிகளை சமாளிப்பதற்குரிய வழிமுறைகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் என்றார்கள். அப்படி இப்பாதையில் செல்பவர்களுக்கு, தீனை நிலைநாட்ட போராடுபவர்களுக்கு இறைவன் அவர்களின் பாவங்களை மன்னித்து சுவனத்தில் புகுத்துவதாக வாக்குறுதி அளிப்பதோடு, அல்லாஹ்வின் உதவியும் அவர்களுக்கு உண்டு என நற்செய்தி கூறுகிறான். இப்படி அல்லாஹ்வின் மார்க்கத்தை பின்பற்றுதலும், அதனை பரப்புவதும், அதனை இம்மண்ணில் மேலோங்க செய்வதும் ஆகிய இப்பணியை தான் ”நன்மையை ஏவி தீமையை தடுத்தல்”, ”சத்தியத்தை பரப்புதல்”, ”இகாமத்தே தீன்”, “தீனை நிலைநாட்டுதல்” என பல்வேறு பெயர்களில் சொல்லப்படுகிறது.

அனைத்து நபிமார்களின் பணி
மேற்காணும் பணியை பற்றிய விரிவான விளக்கத்தை கீழ்காணும் திருமறை வசனத்தை ஆழ்ந்து சிந்திப்பதன் மூலம் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
“ நூஹ்வுக்கு எதனை உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கி இருக்கிறான். ஆகவே (நபியே) நாம் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீம், மூஸா, ஈஸா முதலியவர்களுக்கு நாம் உபதேசித்ததும் மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். அதில் பிரிந்து விடாதீர்கள். ஆகவே அவர்களை நீங்கள் அழைக்கும் போது, இணைவைத்து வணங்கும் அவர்களுக்கு பெரும் பளுவாக தோன்றும். அல்லாஹ் தான் விரும்பியவர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். அவனை நோக்கியவர்களுக்கே தன்னிடம் வரும் வழியையும் அவன் அறிவிக்கிறான்” (திருக்குர்ஆன் 42:13).
மேற்காணும் திருமறை வசனத்தை ஆழ்ந்து சிந்தித்தால் எல்லா நபிமார்களின் பணியும் தீனை நிலைநாட்டுவதாக தான் இருந்தது என்பதை நன்கு உணரலாம். இவ்வையகத்திற்கு அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்களும் மக்களிடத்தில் சொன்ன செய்தி ஒன்று தான் என்பதை கீழ்காணும் திருமறை வசனத்தின் மூலம் உணரலாம்.
அ நிஹ்புதல்லாஹ் வஜ் தனிபூத் தாகூத் வதாலிக தீய்னுல் கய்யூம்” – அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள், தாகூத்துக்கு அடிபணியாதீர்கள். இது தான் நேரான மார்க்கம். முஜாஹித் போன்ற திருமறை விரிவுரையாளர்கள் தாகூத் என்பதற்கு அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளை மீறி நடப்பவன் என்று கூறுகின்றனர். எனவே தாகூத் என்பது அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்கும், அல்லாஹ் ஹராமாக்கியதை ஹலாலாக்கும் பிர் அவ்ன், நம்ரூத் போன்றவர்களை மட்டுமல்ல மக்களின் மனோஇச்சைகளின் அடிப்படையில் உருவான சட்டங்களை இயற்றும், உருவாக்கும், அதற்காக போராடும் அனைவரையும் குறிக்கும். அப்படிப்பட்ட தாகூத்திய சக்திகளை எதிர்த்து போராடுவது அனைவர் மீதும் கடமையாகும்.
அல்லாஹ் இவ்வசனத்தில் முதலாவதாக குறிப்பிடுகின்ற நூஹ் (அலை) அவர்கள் 950 ஆண்டுகள் இத்தீனை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டும் வெகு சொற்பமானவர்களே அவர்களை பின்பற்றினர். சத்தியத்தை நிலைநாட்டும் பணியில் சிறு குழு மட்டுமே ஈடுபடும். இறைவனே திருமறையில் சொல்வது போல் பெரும்பான்மையினரின் விருப்பங்களை பின்பற்றினால் சத்தியத்தை விட்டு பிறழ்ந்து போகும் சாத்தியக்கூறுகளும் உள்ளன. அடுத்ததாக குறிப்பிடப்படும் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஒரு சமுதாயமாகவே திகழ்ந்தார்கள். அந்த ஏகத்துவ ஏந்தலின் தியாகத்தின் சுவடுகள் இன்றளவும் ஹஜ்ஜில் நினைவு கூறப்படுமளவு ஆழமானவை.

மூஸா (அலை) சமர்பித்த செய்தி
மூஸா (அலை) பிர் அவ்னிடம் சென்று தான் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் (43:46) என்று அறிமுகப்படுத்திய போது பிர் அவ்ன் உடனே அல்லாஹ்வை ஏற்றுக்கொள்வோன் என்றோ ஏற்றுக் கொள்ள மாட்டான் என்றோ கூறவில்லை. மூஸா (அலை) அவர்கள் வெறும் இறைவனை ஸுஜீது செய்வதற்கோ அல்லது சில சடங்குகளை செய்வதன் பால் மாத்திரம் அழைக்கவில்லை, மாறாக முழுமையான அதிகாரம் அல்லாஹ்விடத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் எனும் முழக்கத்துடனே வந்திருக்கின்றார்கள் என்பதை தெளிவாக பிர் அவ்ன் உணர்ந்ததால் தான் பிர் அவ்ன் உடனே தன் மக்களை பார்த்து கேட்டான் “என்னுடைய மக்களே ! இந்த தேசத்தின் ஆட்சி என்னுடையதல்லவா?” (43:51) என்று தான் கேட்டான். சுருங்கச் சொன்னால் நம் சமுதாய தலைமைகளை விட பிர் அவ்ன் இகாமத் தீனை தெளிவாக புரிந்து வைத்திருந்தான்.

முஹம்மது (ஸல்) சமர்பித்த செய்தி
நபிமார்களின் இறுதி முத்திரை முஹம்மது (ஸல்) சத்திய பிரசாரத்தை மக்கத்து மண்ணில் செய்த ஆரம்பக் கட்டத்தில் வெகு சொற்பமானவர்களே இஸ்லாத்தில் இருந்தார்கள். இஸ்லாத்தில் இருப்பவர்களை துன்பப்படுத்துவது பெரும்பான்மை இஸ்லாமிய எதிரிகளின் வழக்கமாக இருந்தது. அப்படிப்பட்ட காலகட்டத்தில் பனூஅம்ரு பின் ஹாஷா எனும் கோத்திர தலைவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து முஸ்லீம்கள் தங்கள் மார்க்க கடமைகளை செய்வதற்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் அதற்கு பதிலாக முஸ்லீம்கள் ஆட்சி அதிகாரம் பெறும் போது தங்கள் கோத்திரத்துக்கு அதில் பங்களிக்க வேண்டும் என்று கோரினார். ஆட்சி, அதிகாரம் கிடைப்பது ஒரு புறம் இருக்க, தங்களை அடித்தால் கூட கேட்பதற்கு ஆளில்லா நம்மை விட வெகு பலவீனமான நிலையில் இருந்த போது கூட அண்ணலார் (ஸல்) அக்கோரிக்கையை மறுத்ததோடு “ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது” என்று முழங்கினார்கள்.
இகாமத்தே தீன் என்பது எல்லா நபிமார்களின் பணி மாத்திரமல்ல, அவர்களை வாய்மையோடு பின்பற்றிய சத்திய சீலர்களும் அவ்வழித்தடத்திலே பயணம் செய்துள்ளனர் என்பதை வரலாற்று சுவடுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இவ்வுலகை படைத்தவன் எவனோ அவனுடைய சட்டங்கள் தான் இவ்வுலகை ஆளவேண்டும் என்பதை பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளும். வானுக்கு அதிபதி தான் பூமிக்கும் அதிபதி எனும் உண்மையை மக்களின் உள்ளங்களில் ஆழப் பதியச் செய்யும் ஒரு செயலே இகாமத்தே தீன் என்றும் சொல்லலாம். முகீரா பின் ஷுஐபா (ரலி) ருஸ்தும் மன்னனிடம் படையெடுத்து சென்ற போது படையெடுப்பின் நோக்கத்தை பற்றி சொன்னார்கள் “மக்களை மனிதர்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து அல்லாஹ்வின் அடிமைகளாக மாற்றவே வந்திருக்கின்றோம்” என்று தீனை நிலைநாட்டுதலின் விளக்கத்தை சொன்னார்கள்.

ஒற்றுமை
மேற்கண்ட திருமறையின் 42:13ம் வசனத்தில் தீனை நிலைநாட்டுங்கள் என்று சொல்லி விட்டு அதில் பிரிந்து விடாதீர்கள் என்றும் அல்லாஹ் அறிவுறுத்துகிறான். எனவே இஸ்லாத்தை முழுமையாக பின்பற்ற விரும்புபவர்கள், இஸ்லாத்தை இம்மண்ணில் ஆளும் கொள்கையாக நிலை நாட்ட விரும்புவர்கள் தனித் தனித் தீவுகளாக பிரிந்து இருக்க கூடாது. மாறாக அனைவரும் ஒரு கூட்டமைப்பாக ஒரு தலைமையின் கீழ் செயல்பட வேண்டும். குறிப்பாக இஸ்லாத்துக்கு எதிரான ஜாஹிலிய்யா சக்திகள் இஸ்லாத்தை நசுக்க ஓரணியில் திரண்டு நிற்கும் போது இஸ்லாத்தை நிலைநாட்ட போராடும் இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்று சேர வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள் ”ஜமாத் இல்லாமல் இஸ்லாம் இல்லை, தலைமை இல்லாமல் ஜமாத் இல்லை, அடிபணிதல் இல்லாமல் தலைமைத்துவம் இல்லை” என்று சொன்னபடி இஸ்லாம் ஜமாத்தோடு இருப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. அதனால் தான் இஸ்லாத்தின் தலையாய கடமையான தொழுகையை தனியாக தொழுவதை விட ஜமாத்தாக தொழுவதற்கு 27 மடங்கு நன்மை உள்ளது மாத்திரமல்ல, அல்லாஹ்வின் தூதரும் யார் தக்க காரணமின்றி தனியாக வீட்டில் தொழுகின்றாரோ அவர்களின் வீடுகளுக்கு சென்று தீ வைத்து எரித்து விட என் மனம் நாடுகிறது என்று ஜமாத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறதை பார்க்கின்றோம். அது போலவே ஜும்மா தொழுகை, நோன்பு, ஜகாத், சர்வதேச சகோதரத்துவ மாநாடாகிய ஹஜ் அனைத்தும் ஜமாத்தின் அவசியத்தை வலியுறுத்துவதை பார்க்கின்றோம்.

தலைமைத்துவம்
தலைமைத்துவத்துக்கும் இஸ்லாம் அழுத்தமான முக்கியத்துவம் கொடுப்பதற்கு நபிகளாரின் ஸீராவில் பல உதாரணங்களை பார்க்கலாம். பருவ வயதை அடைந்து விட்ட பெண்ணுக்கு திருமணம் செய்வது, ஜமாத் தொழுகையை பிற்படுத்துதல், ஜனாஸாவை அடக்கம் செய்தல் ஆகியவை பிற்படுத்த கூடாத செயல்கள் என்பது நமக்கு நன்றாக தெரியும். நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு மாத்திரமல்ல, எல்லா முஸ்லீம்களுக்கும் உயிரினும் மேலானவர்கள். அந்த அகிலத்தின் அருட்கொடை முஹம்மது (ஸல்) அவர்கள் மரணித்து விடுகிறார்கள். குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. சுயநலன்களுக்காக இஸ்லாத்தில் இருந்த ஒரு சிறு கூட்டம் இது தான் சமயம் என்று இஸ்லாத்தை விட்டே வெளியேறுகின்றது. இன்னொரு கூட்டம் ஜகாத் கொடுக்க மாட்டோம் என்று இஸ்லாத்தின் சில கடமைகளை மறுக்கிறது. உமர் (ரலி) போன்ற ஸஹாபாக்கள் நபி (ஸல்) இறந்து விட்டதை நம்ப முடியாமல் உணர்ச்சி வசப்படுகிறார்கள். யாராவது பெருமானார் இறந்து விட்டதாக சொன்னால் அவரது தலையை கொய்து விடுவேன் என்று எச்சரிக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட நபிகளாரின் உடல் அடக்கப்படும் முன் அங்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
மேற்காணும் சம்பவத்தை சிந்தித்து பாருங்கள். நபி (ஸல்) அவர்களின் உடல் அடக்கப்படும் முன்னால் அங்கு ஒரு தலைமை தேர்ந்தெடுக்கப்படுகிறது என்றால் இந்த சமுதாயம் ஒரு நொடி கூட தலைமை இல்லாத சமுதாயமாக நாதியற்று போய் விடக் கூடாது என்பதால் தான். மக்காவில் இருந்த போதும், மதீனாவில் இருந்த போதும், சிறுபான்மையினராக இருந்த போதும், சமுதாயமாக மிளிர்ந்த போதும், போர்க்களங்களிலும், வியாபார பிரயாணங்களிலும் எல்லாக் கட்டங்களிலும் ஒரு தலைமை இல்லாமல் இச்சமுதாயம் இருந்ததில்லை. உமர் (ரலி) அவர்கள் ஷஹீதாக்கப்பட்டு மரணத்தருவாயில் தன்னை நபி(ஸல்) மற்றும் அபூபக்கர் அடக்கம் செய்த இடத்திற்கு பக்கத்திலேயே அடக்கம் செய்ய அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அனுமதி கேட்குமாறு தங்கள் மகன் இப்னு உமரை அனுப்பிய போது அனுமதி கொடுத்து விட்டு அவர்கள் அத்தருணத்திலும் உமர் (ரலி) அவர்களை அவருக்கு பின் ஒரு ஆட்சியாளரை நியமித்து விட்டு செல்ல சொன்னார்கள்.

1924 வரை தொடர்ந்த தலைமைத்துவம்
உதுமானிய கிலாபத்தின் கடைசி கலீபா இரண்டாம் அப்துல் ஹமீது (ரஹ்) அவர்களின் காலத்தில் நாடோடி யூதர்கள் தங்கள் பொருளாதார பலத்தை கொண்டு பலஸ்தீனத்தின் நிலங்களை அபகரித்து கொண்டிருந்த போது இவர்களின் சூழ்ச்சியை புரிந்து கொண்ட சுல்தான் அப்துல் ஹமீது அவர்கள் யூதர்களுக்கு நிலங்களை விற்பதை தடை செய்து அரசாணை வெளியிடுகிறார்கள். தங்கள் சியோனிஸ கனவுக்கு தடையாக அமைந்த இவ்வரசாணையை விலக்கிக் கொள்ள சுல்தான் அப்துல் ஹமீதை சந்தித்த யூதர்களின் குழு உதுமானிய கிலாபத்தின் அத்துணை கடன்களையும் அடைத்து விடுவதாகவும் மேலும் பொருளாதார உதவிகளையும் அளிப்பதாகவும் வாக்களித்த போது அதற்கு பகரமாக கலீபா சொன்னார்கள் “பலஸ்தீனம் என்னுடைய பரம்பரை சொத்தல்ல, நான் நினைத்த மாதிரி கொடுப்பதற்கு, இது முஸ்லீம்களின் சொத்து. இந்த பகுதி முழுவதும் முஸ்லீம்களின் குருதியால் பயிரிடப்பட்டிருக்கின்றது. பலஸ்தீன மண்ணில் ஒரு பகுதியை கொடுப்பதை விட என் உடம்பில் ஒரு பகுதியை கொடுப்பது எனக்கு எளிதாக இருக்கும். என்னுயிர் உள்ள வரை அரசாணை விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது” என்று தெளிவாக சொன்னார்கள்.

கிலாபத்தின் வீழ்ச்சிக்கு பிறகு
முஸ்லீம்களின் கிலாபத் உள்ள வரை யூதர்களால் இஸ்ரேலிய கனவு தேசத்தை மெய்ப்படுத்த முடியவில்லை. அது மாத்திரமல்ல கிலாபத்தின் கடைசி கால கட்டங்களில் புதுச்சேரியில் உள்ள நிரவியில் விநாயகர் ஊர்வலம் பள்ளிவாயில் வழியாக எடுத்து செல்ல சங் பரிவாரங்கள் திட்டமிட்ட போது நிரவியின் ஜமாத் தலைவர் சுல்தான் அப்துல் ஹமீது (ரஹ்) அவர்களுக்கு கடிதம் எழுதி கலீபாவும் புதுச்சேரியை கையகப்படுத்தியிருந்த பிரெஞ்சு அரசாங்கத்திடம் பேசி ஊர்வலப்பாதையை மாற்றியதை வரலாற்றின் ஏடுகளில் காண்கின்றோம். ஆனால் எப்போது கிலாபத் ஜாஹிலிய்யா கொள்கைகளான தேசியவாதம், மதசார்பின்மை போன்றவற்றை முஸ்லீம்களின் உள்ளத்தில் ஊடுறுவி வெட்டி வீழ்த்தப்பட்டதோ, அப்போதிலிருந்தே முஸ்லீம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை தட்டிக் கேட்கவும் ஆளில்லா நிலைமைகளை பார்க்கின்றோம். 55 முஸ்லீம் நாடுகள் இருந்தும், 4-ல் 1 பங்கு மனித வளம் இருந்தும், கறுப்பு தங்கம் என்று சொல்லப்படும் பெட்ரோல் வளம் உள்ளிட்ட கனிம வளங்கள் இருந்தும் தங்களுடைய சொந்த நாடான பலஸ்தீனத்தில் முஸ்லீம்கள் யூதர்களால் அகதிகளாக்கப்பட்டாலும், ஓரே இரவில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் தங்கள் உடமைகளை இழந்து இலங்கையில் புலிகளால் வெளியேற்றப்பட்டாலும், கலாசாரத்தை உலகுக்கு கொடுத்த ஈராக் பெட்ரோலுக்காக அமெரிக்காவால் மனிதர்கள் வாழ முடியா காடாக மாற்றப்பட்டாலும், எம் சொந்த நாட்டிலேயே மோடிக்களால் கருவிலிருக்கும் குழந்தை உட்பட ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டாலும் தட்டிக் கேட்க யாரும் இல்லா அவல நிலையை நிதர்சனமாக பார்க்கின்றோம்.
கிலாபத் வீழ்ச்சிக்கு பிறகு ஓரே தேசமாக இருந்த இச்சமுதாயம் 55 நாடுகளாக பிளவுபட்டு கொண்டிருப்பது மட்டுமல்ல, அதில் பெருமிதமும் கொள்ளக்கூடிய ஒன்றாக உள்ளது. நபி (ஸல்) அவர்கள் ஒரு காலத்தை பற்றி முன்னறிவிப்பு செய்தார்களே “ ஒரு காலம் வரும். பிற சமுதாயங்கள் உங்களை நோக்கி இரையை நோக்கி பாயும் பிராணியை போல் பாயும் என்று சொன்ன போது ஸஹாபாக்கள் நாங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்போமா என்று சொன்ன போது இல்லை உங்களிடத்தில் வஹ்ன் இருக்கும் என்று சொன்னார்கள். வஹ்ன் என்றால் என்ன என்று ஸஹாபாக்கள் கேட்ட போது மரணத்தை கண்டு பயமும் உலகத்தின் மீதான ஆசையும் என்று சொன்ன கால கட்டத்தில் வாழ்கிறோமோ என்று பயப்பட வேண்டி உள்ளது என்றால் அது மிகையானதல்ல.
கிலாபத் வீழ்ச்சிக்கு பிறகு கர்ஸன் சொன்னார் “முஸ்லீம் உம்மத்தின் முதுகை முறித்து விட்டோம்”. இன்று ஏகாதிபத்திய சக்திகள் கிலாபத் மீள் உருவாக்கலை நினைத்தே அஞ்சிக் கொண்டிருக்கின்றன. அதனால் தான் ஈராக் போரின் போது அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் அதை சிலுவை போருக்கு அதாவது, பைத்துல் முகத்தஸை ஆக்கிரமித்த கிறிஸ்துவ படைக்கும் தீனை நிலைநாட்ட போராடிய இப்பூமி பெற்றெடுத்த வீரமகன் சுல்தான் ஸலாஹீத்தின் அய்யூபிக்கும் நடந்த போராட்டமாக சித்தரித்தார். அதனால் தான் 42:13 ம் வசனத்தில் அல்லாஹ் அது காபிர்களுக்கு சுமையாக இருக்கிறது என்கிறார். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும், கிலாபத்தின் பால் அழைக்கப்படுதல், அல்லாஹ்வுக்கே அதிகாரம் என்று சொல்வது முஸ்லீம்களில் சிலருக்கே பாரமாக இருக்கிறது.

பயணம் செய்ய தேவையான தகுதி
மேற்கண்ட வசனத்தின் இறுதியில் இந்த தீனை நிலைநாட்டும் பணியில் அல்லாஹ் தான் விரும்பியவர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் என்று இறைவன் கூறுகிறான். அல்லாஹ் நம்மை இந்த இகாமத்தே தீனுடைய பணியில் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் அதற்கு நிபந்தனையாக யார் அவனை நோக்கி வருகிறார்களோ அவர்களை தேர்ந்தெடுப்பதாக கூறுகிறான். எனவே இத்தீனை நிலைநாட்டும் பணியில் ஈடுபடுபவர்கள் இறைவனை நோக்கியே தங்களுடைய பயணத்தை அமைத்து கொள்ள வேண்டும். அவர்களுடைய எல்லா செயல்களிலும் இறைவனின் திருப்பொருத்தத்தையே நாட வேண்டும். சுருங்கச் சொன்னால் இப்ராஹிம் (அலை) அவர்கள் கேட்ட துஆவை போல் இப்பாதையில் பயணிப்பவர்களின் தொழுகை, நேர்ச்சை, குர்பானி, தியாகம், வாழ்வு, மரணம் எல்லாமே அல்லாஹ் ஒருவனுக்காகவே, அவனுடைய திருப்தியை பெறுவதற்காகவே அமைய வேண்டும்.

பயணிக்க வேண்டிய பாதை
தீனை நிலைநாட்டும் பயணத்தில் தங்களை இணைத்து கொண்டவர்கள் தங்கள் பயணத்திற்கான இலக்கை அடைய எப்பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்க வேண்டும். ஏனென்றால் இஸ்லாத்தை பொறுத்த வரை நோக்கத்தை போல் வழிமுறையும் முக்கியமானது. இறைவனின் திருப்தியை நோக்கமாக கொள்வது போல் அதை அடையும் வழிமுறையும் பெருமானாரின் வழித்தடமாக இருக்க வேண்டும். இவ்வுலகில் ஃபிரெஞ்சு புரட்சி, ரஷ்யப் புரட்சி என நிறைய புரட்சிகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இப்புரட்சிக்கான சிந்தனையை பேச்சின் மூலம் எழுத்தின் மூலம் விதைத்தவர்கள் களப்போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஈடுபட்டவர்கள் அப்போராட்டம் முழுமையடையும் வரை அதற்கான தலைமைத்துவத்தை வழங்க முடியவில்லை. உலகிலியே “லா இலாஹ இல்லல்லாஹ் “ எனும் புரட்சி முழக்கத்தை வைத்து இவ்வையக்த்திலேயே மிகப் பெரும் புரட்சியை செய்து மனித குலம் கண்டிராத மிகப் பெரும் சமுதாயத்தை சமைத்த பெருமை அண்ணலாருக்கு மட்டுமே உண்டு. அந்த புரட்சி தூதரின் பயணத்தின் படிநிலைகள் மட்டும் குறிப்பிடப்படுகின்றன.

பயணத்தின் மைல்கற்கள்
1. தஃவத் இலா தவ்ஹீத்
நபி (ஸல்) அவர்கள் மக்கத்து மண்ணில் பிரசாரத்தை ஆரம்பித்த போது எத்துணையோ பிரச்னைகள் இருந்தன. எளியவர்களை வலியவர்கள் சுரண்டிக் கொண்டிருந்தனர். பெண்களை போகப்பொருளாக கருதிக் கொண்டிருந்தனர். குலம் கோத்திரத்தின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. இச்சூழ்நிலையில் நபி (ஸல்) அவர்கள் எளியவர்களுக்கு போராடும் ஏழைப்பங்காளானாக இருந்திருந்தால் மக்கள் கூட்டத்தை தன் பின்னால் திரட்டி பின் எளிதாக சத்தியத்தை எடுத்து சொல்லியிருக்கலாம். அதே போல் முதலில் பெண்களின் உரிமைகளுக்காக போராடும் பெண்ணுரிமைவாதியாக இருந்திருந்தாலும் அவர்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பை குறைத்திருக்கலாம். இவையெல்லாம் தற்காலிக தீர்வுகளே என்பதனால் தான் அல்லாஹ் நிரந்தர தீர்வாகிய லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற புரட்சி முழக்கத்தை கொண்டு ஏகத்துவத்தை முழுமையாக நம்பும் ஒரு சமுதாயத்தை உருவாக்குவது மட்டும் தான் இப்பாதையின் முதல் மைல்கல் என்று தவ்ஹீதின் பக்கம் அழைப்பை கொடுத்தார்கள்.


2. ரிஸாலத்தின் அடிப்படையிலான ஜமாத்
நபி (ஸல்) மக்கத்து மண்ணில் தனித் தனி மனிதர்களை உருவாக்கிய போது நுபுத்துவத்தின் அடிப்படையிலான சிறந்த தலைமையாக விளங்கினார்கள். மதீனாவில் ஒரு சமூகமாக உருவான போது அவர்களை சகோதரத்துவ உணர்வு கொண்டு பிணைத்தார்கள். திருமறையில் அல்லாஹ் குறிப்பிடுவது போன்று பூமியில் உள்ள எந்த செல்வத்தை செலவு செய்தாலும் உருவாக்க முடியாத பாசத்தை அன்சாரிகளுக்கும் முஹாஜீர்களுக்கும் மத்தியில் ஏற்படுத்தினார்கள். முஹாஜீர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த போது அன்சாரிகள் தங்களிடமிருந்தவற்றில் பாதியை பங்கு கொடுக்குமளவுக்கு பாசத்தால் பிணைத்தார்கள். பல் வேறு கோத்திர, குல பிண்ணணி உள்ளவர்கள் மத்தியில் எந்த பிணக்கும் ஏற்படாமல், பிணக்கு ஏற்பட்டாலும் உடனே அதை முளையிலேயே கிள்ளி எறிந்து ஒரு அற்புதமான தலைமையை வழங்கினார்கள்


3. ஆஹிரத்தின் அடிப்படையிலான தஜ்கியத்
நபி (ஸல்) மக்கத்து குறைஷிகளிடம் தவ்ஹீதை, ரிஸாலத்தை சொன்ன போது சந்தித்த எதிர்ப்புகளை விட மறுமையை பற்றி சொன்ன போது தான் அதிக எதிர்ப்புகளை சந்தித்தார். மண்ணோடு மண்ணாக மக்கி போய் விட்ட பிறகு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோம் என்பதை நம்ப மறுத்த அதே சமூகத்தில் தான் விபசாரம் செய்த பிறகு அத்தவறை உணர்ந்த காமிதியா எனும் பெண்மணி யாருக்கும் தெரியாவிட்டாலும் மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் குற்றவாளியாக்கப்படுவதை விட இவ்வுலகில் கல்லால் அடித்து கொல்லப்படுவதை விரும்பக்கூடிய அளவு அச்சமூகத்தை மறுமை நம்பிக்கையை அழுத்தமாக மனதில் பதிய வைத்து வார்த்தெடுத்தார்கள். ஸஹாபாக்கள் ஒவ்வொருவரும் அவ்வாறு தான் உருவாக்கப்பட்டார்கள். அதனால் தான் கடுமையான வேதனைகளை அனுபவித்த அம்மார் (ரலி) அவர்களுக்கு, அம்மாரின் எலும்புக்குள்ளும் ஈமான் ஊடுறுவியிருக்கிறது என்று சொல்லும் அளவு தியாகம் செய்த அம்மாருக்கு சுவனம் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது என்று மறுமையை சொல்லி தான் ஆறுதல் சொன்னார்கள் . அதனால் தான் மக்கத்து சுடுமணலில் தினந்தோறும் கொடுமைப்படுத்தப்பட்ட பிலால் (ரலி) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியில் ஆளுநராக நியமிக்கப்பட்ட போது ஒரு மனிதர் அவரிடம் தற்போது நீங்கள் சுகமாக இருக்கிறீர்கள் தானே என்று கேட்ட போது பிலால் (ரலி) அவர்கள் “மக்கத்து சுடுமணலில் கொளுத்தப்பட்ட போது அஹதுன், அஹதுன் என்று சொன்னேனே, அப்போது சுவனத்தின் வாடையை நுகர்ந்து கொண்டிருந்தேன், அந்த நிம்மதி இப்போது இல்லை என்று சொன்னார்கள். இப்படியாக மறுமையின் அடிப்படையில் நபிகளார் அவர்களின் பண்பு நலன்களை செதுக்கினார்கள். அதனால் தான் பத்ர் போரின் வெற்றியை பற்றி எழுதும் வரலாற்றாசிரியர்கள் நபி (ஸல்) அவர்களின் பண்பு நலன்களை பற்றி இவ்வாறு எழுதுகின்றனர் “ பத்ரில் நபியை நிமிர்ந்து பார்த்த எதிரிகள் தோல்வியடைந்தனர்” என்று சொல்லும் அளவுக்கு நபிகளார் மற்றும் அவரால் உருவாக்கப்பட்ட ஸஹாபாக்களின் பண்பு இருந்தது.

4. சுயகட்டுப்பாடு
தீனை நிலைநாட்டும் பணியில் சுயகட்டுப்பாடு மிகவும் அவசியம். இப்பாதையில் பணியை தொடங்குவதற்கு முன்னமேயே பணியை விட்டு விடும் அளவு எதிர்ப்புகள் அலைகடலென திரண்டு வரும். அவற்றிக்கு உடனே பதிலடி கொடுக்க வேண்டுமென்ற ஆவேசத்தில் இலக்கை விட்டு விலகிடாமல் பொறுமை காக்க வேண்டும். ஸஹாபாக்களுக்கு நபி (ஸல்) கொடுத்தது Positive (நேர்மறை) பயிற்சி என்றால் அபூஜஹல் போன்ற இஸ்லாமிய எதிரிகள் கொடுத்த Negative (எதிர்மறை) பயிற்சியும் ஸஹாபாக்களை புடம் போட உதவின. பெருமானார் (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் பள்ளத்தாக்கில் 3 வருடங்கள் சமூக பரிஷ்காரம் செய்யப்பட்ட போது புடம் போட்ட தங்கங்களாக மிளிர்ந்தனர். அதனோடு ஒப்பீடு செய்ய முடியாதெனினும் இஸ்லாமிய வாதிகளுக்கு சிறைச்சாலைகளில் மிகப் பெரும் துன்பம் இழைக்கப்படுவதை மறுக்க முடியாது. உண்மையிலேயே நவீன இஸ்லாமிய சிந்தனையாளர்களை செதுக்கியதில் சிறைச்சாலைக்கும் பங்குள்ளது என்றால் அது மிகையானதல்ல. ஏனென்றால் ஒரு இஸ்லாமியவாதி சிறைச்சாலையின் கொடுமைக்கு உட்படுத்தப்படும் போது ஒன்று இப்பாதையை விட்டும் விலகிப் போய் விடுவான் இல்லையென்றால் இன்னும் புடம் போட்ட தங்கமாக மிளிர்கின்றான் என்பதை நாம் வரலாற்றில் பார்க்கின்றோம். அதனால் தான் நவீன பிர் அவ்ன்களால் ஷஹீத் சையத் குதுப் (ரஹ்) அவர்கள் சிறைப்படுத்தப்பட்ட போது அவரிடம் தீனை நிலைநாட்டும் பணியில் இருந்து விலகினால் சிறையிலிருந்து விடுவித்து கல்வி அமைச்சர் பதவி தருவதாக ஆசையுட்டப்பட்ட போது சையது குதுப் அவர்கள் “இந்த இஸ்லாத்தின் எதிரிகள் என்னை என்ன செய்து விட முடியும்?. என்னை சிறையில் அடைத்தால் அது அல்லாஹ்வுடனான உரையாடல், நாடு கடத்தினால் ஹிஜ்ரத், தூக்கிலிட்டால் ஷஹாதத்” என்று இப்னு தைமியா (ரஹ்) அவர்களின் வார்த்தையை மேற்கோள் காட்டினார்கள். ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என்று கேட்கும் அளவு அலைக்கழிக்கப்பட்டார்கள் என்று திருமறை குறிப்பிடுகிறது. பொறுமையோடு இப்பணியில் தங்களை அர்ப்பணித்து கொண்டதால் ”அல்லாஹ்வின் உதவி சமீபத்தில் இருக்கிறது” என்று இறைவன் ஆறுதலளித்ததை பார்க்கின்றோம்.

5. எதிர்த்து போராடுதல்

நிச்சயமாக இஸ்லாமிய உம்மாவானது தனக்கென்று பலத்தை உருவாக்கிய பின்னால் அதை தக்க வைத்து கொள்ளவும், தன் ஆட்சியில் குழப்பம் இல்லாதொழிந்து மார்க்கம் அல்லாஹ்வுக்கு என்று ஆகும் வரை எப்போதும் போராடும் முனைப்புடன் இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு சென்றவுடன் செய்த முதல் மூன்று முக்கிய காரியங்கள் 1. முஸ்லீம்கள், யூதர்கள் என மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தல். 2. அன்சாரிகளுக்கும் முஹாஜீர்களுக்கும் மத்தியில் சகோதரத்துவ ஒப்பந்தம் ஏற்படுத்துதல் 3. யூதர்கள் மற்ரும் பிற குழுக்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்துதல் . ஒரு இஸ்லாமிய அரசு தன் பலம், பலவீனம் அறிந்து தற்காப்பு யுத்தம் நடத்தும் அதே வேளையில் வாய்ப்புகள் கிடைக்கும் போது தானாகவே சென்றும் தாக்குதல் நடத்தும். பத்ரில் கூட எளிதான வியாபார கூட்டம், வலிமையான படை என்று தேர்வு செய்யும் வாய்ப்பு வந்த போது இறைவன் அவர்கள் போரை தேர்ந்தெடுக்க வைத்ததை பார்க்கின்றோம்.

6. விரிவாக்கல்
இஸ்லாமிய ஆட்சியானது எப்போதும் தன் எல்லையுடன் திருப்திபட்டுக் கொள்ளாமல் சத்திய செய்தியை உலகம் முழுவதும் பரப்பி ஒட்டு மொத்த வையகத்திலும் இத்தீனை மேலோங்க செய்யும் வரை திருப்தியுராது. நபி (ஸல்) அவர்கள் மரணித்த வேளையில் கூட உஸாமா பின் ஜைத் (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு படையை அனுப்பிய பிறகே அவர்களின் உயிர் பிரிந்ததை பார்க்கின்றோம்.


இப்படியாக ஒரு இஸ்லாமிய இயக்கம் மேற்கண்ட ஆறு படிநிலைகளையும் தாண்டாமல் இஸ்லாமிய அரசை நிறுவுவது சாத்தியமல்ல. அது ஓரே சமயத்தில் இரண்டு, மூன்று படிநிலைகளில் பயணிக்க வேண்டியும் வரலாம். எத்துணை சோதனைகள் வந்தாலும் இடர்பாடுகள் வந்தாலும் நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழிமுறையிலேயே இஸ்லாத்தை நிலை நாட்டும் முயற்சி நடைபெற வேண்டும். ஜாஹிலிய்ய சிந்தனைகள் எவ்வளவு கவர்ச்சிகரமாக இருந்தாலும் எள்ளளவு, எள்ளின் முனையளவு, முனையின் மூக்களவும் சமரசம் செய்ய கூடாது. ஏனென்றால் இஸ்லாமும் ஜாஹிலிய்யாவும் எப்போதும் ஒன்று சேர முடியாது. அல்லாஹ்வின் சட்டங்கள் தான் இப்பூமியை ஆள வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு போதும் குறைமதி கொண்ட மனித சிந்தனையின் மனோஇச்சையின் உருவான சட்டங்களின் அடிப்படையில் போராடவோ, அசத்தியத்திற்கு சான்று பகர்வோர்களாகவோ ஆக கூடாது.


பாதையில் வெற்றி பெற
இறை வேதம், இறை தூதரின் வாக்கு மீது நம்பிக்கை
இஸ்லாமிய ஆட்சி மீண்டும் ஏற்படும் என்ற முழுமையான நம்பிக்கை ஒரு முஃமினுக்கு இருக்க வேண்டும். முஸ்லீம்கள் தற்போது இச்சமூகம் சந்தித்து வரும் சோதனைகளை, வேதனைகளை வைத்து நம்பிக்கையிழந்து விடக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு முன்னறிவிப்பு செய்தார்கள் “அல்லாஹ் விரும்பும் காலம் வரைக்கும் நுபுத்துவம் இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். பின் அல்லாஹ் விரும்பும் காலம் வரைக்கும் நுபுத்துவத்தின் வழிமுறையிலான கிலாபத் இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். அதற்கு பின் பரம்பரை ரீதியிலான ஆட்சிமுறை இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். அதற்கு பின் கொடுங்கோலர்கள் ஆட்சி அல்லாஹ் நாடும் வரை இருக்கும், அவன் நாடும் போது அதையும் நீக்கி விடுவான். பின் நுபுத்துவத்தின் வழிமுறையான கிலாபத் (இறையாட்சி) ஏற்படும் என்று கூறி விட்டு பின் அமைதியாக இருந்து விட்டார்கள்” (ஹீதைபா (ரலி) – முஸ்னத் அஹ்மத், திர்மிதி எண் 5378). நபி (ஸல்) அவர்களின் மேற்கண்ட முன்னறிவிப்பின் படி பார்க்கையில் நுபுத்துவம், கிலாபத்தே ராஷிதியா, பரம்பரை முடியாட்சி அனைத்தும் நீங்கி கொடுங்கோலர்களின் ஆட்சியில் இருக்கும் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இஸ்லாமிய ஆட்சி ஏற்படும் என்பது உண்மை. இப்போது நம்முன் உள்ள கேள்வி அல்லாஹ்வும் அவனது தூதரும் அளித்த வாக்குறுதிகளை உண்மையாக நம்பி நம் காலத்தில் வந்தாலும், வரா விட்டாலும் எதிர்கால தொலைநோக்கு அடிப்படையில் அவனுடைய மார்க்கம் மேலோங்க உழைக்க போகிறோமா? அல்லது நம்முடைய பலவீனத்திற்கு நியாயம் கற்பித்து இஸ்லாத்தை இஸ்லாம் அல்லாத வழிமுறைகளின் மூலம் நிலைநாட்டுவதாக எண்ணி இஸ்லாம் ஹராமாக்கிய ஒன்றை செய்ய போகிறோமோ?. அல்லாஹ்வும் தன் திருமறையில் “ மனிதர்களே ! உங்களில் எவரேனும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து வந்தால் அவர்களுக்கு முன்னர் சென்றவர்களைப் பூமிக்கு அதிபதிகளாக்கி போன்றே இவர்களையும் பூமிக்கு அதிபதியாக்குவதாக அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்” (அல்குர்ஆன் 24:55) என்று உற்சாகமளிக்கிறான்.

தியாகமும் மறுமை நம்பிக்கையும்
இந்தியாவில் வகுப்புக் கலவரங்களில் ஏராளமான முஸ்லீம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தை ஒரு கொள்கையாக எடுத்துச் சொன்னதற்காக, இஸ்லாத்தை நிலைநாட்டுவதற்காக நம் உயிரிழப்பும் அர்ப்பணிப்பும் மிக குறைவாகும். மக்காவின் சுடுமணலில் கொடுமைப்படுத்தப்பட்ட போது சுவனத்தின் வாடையை நுகர்ந்த பிலால் (ரலி), எலும்புக்குள்ளும் ஈமான் ஊடுறுவியுள்ளது என்று தூதரால் சொல்லப்பட்ட அம்மார்(ரலி), முழு சொத்தையும் அண்ணலாரோடு வாழ அர்ப்பணித்த சுஹைப் (ரலி), செல்வந்தராக பிறந்து இறக்கும் போது உடலை மூடவும் வழியின்றி மரணித்த முஸைப் (ரலி) ஆகியோரைப் போல் நாம் மறுமையை மனதிலே சுமந்தால் தீனை நிலைநாட்டும் பாதையில் தியாகங்களும் நமக்கு எளிதாக தெரியும், நம் பாதையும் தெளிவாகும்.

முடிவுரை
”(நபியே!) மார்க்கத்தின் நேரான ஒரு வழியில்தான் நாம் உங்களை ஆக்கியிருக்கின்றோம். ஆகவே அதனையே நீங்கள் பின்பற்றி நடப்பீராக! கல்வி ஞானமற்ற இந்த மக்களின் விருப்பங்களை பின்பற்றாதீர்கள்” (அல்குர்ஆன் 45:18) என்று இறைவன் குறிப்பிடுவது போல் நிச்சயமாக இஸ்லாம் ஒன்று மட்டுமே அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ள கூடிய மார்க்கமாக இருப்பது போலவே அதை அடையும் வழிமுறையும் ஒன்றாக தான் இருக்க முடியும். “Un Islamic are Anti Islamic” என்று சொல்வது போல் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டிய இஸ்லாத்தின் அடிப்படையிலான அரசியல் தவிர மற்ற அனைத்தும் ஜாஹிலிய்யாவே. அவற்றை விரும்பி பின்பற்றுவதும் அதன் அடிப்படையில் போராடுவதும் அதை நிலை நாட்ட போராடுவதும் நிச்சயமாக தடுக்கப்பட்ட ஒன்றே.

”உலகத்தில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமென்றால் முதலில் உங்கள் உள்ளத்தில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துங்கள்” என்று ஹஸன் அல் ஹீஸைபி கூறியதை போன்று நாம் தனி நபராக இருந்தாலும் இப்ராஹீம் (அலை) அவர்களை போன்று ஒரு சமுதாயமாக நாம் செயல்பட வேண்டும். முதலில் நம்மை, நம் குடும்பத்தை, மஹல்லாவை, சமூகத்தை இஸ்லாமிய அச்சில் முழுமையாக வார்த்தெடுக்க நம் நேரம், உடல், பொருளாதாரம், உயிரையும் அர்ப்பணிப்போம். அல்லாஹ் திருமறையில் “நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) என்று குறிப்பிடுவது போல் நாம் விளங்கும் போது நிச்சயம் இந்த தீன் உலகை ஆளும் கொள்கையாக மாறும் இன்ஷா அல்லாஹ். எத்துனை அடிகள் எடுத்து வைத்தோம் என்பது முக்கியமல்ல. ஆனால் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டிய வழியில் இருக்கிறதா என்பது முக்கியம். பாதை தெரிகிறது என்பதற்காக மேற்கு நோக்கி பயணிப்பவன் ஒரு போதும் சூரிய உதயத்தை காண முடியாது.
ஒவ்வொரு கற்களாய் கொண்டு
வந்து மாளிகை செய்வோம்
நம் வியர்வையாலும் இரத்தத்தாலும்
மார்க்கத்துக்கு உரமிடுவோம்
அல்லாஹ்வின் உதவியும் நம் முயற்சியும்
ஒன்று சேரும் போது
இன்ஷா அல்லாஹ் இறையாட்சி
எனும் கனவும் நனவாகும்.

தவ்ஹீத் அர் ருபூபியா

ருபூபியா என்ற சொல் ’ரப்’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததாகும். தவ்ஹீத் அர் ருபூபியா என்பது படைப்பினங்கள் அனைத்தையும் அவன் ஒன்றுமில்லா நிலையிருந்து உயிர் பெறச் செய்து, வாழ செய்பவன் அவன் ஒருவனே என்பதை ஏற்றுக் கொள்வதாகும்.
தவ்ஹீத் அர் ருபூபியாவை ஏற்றுக் கொண்டால் கீழ்கண்டவற்றை நம்ப வேண்டும்.
Ø எல்லாவற்றிக்கும் காரணகர்த்தா அல்லாஹ் ஒருவனே
Ø அனைத்தையும் ஒன்றுமில்லா நிலையிலிருந்து உயிர் பெற செய்து வாழ செய்பவன் அல்லாஹ் ஒருவனே.
Ø அல்லாஹ் தன் படைப்பினங்களின் உதவி தேவைப்படாதவன், மாறாக உலகின் அனைத்து படைப்பினங்களும் அல்லாஹ்வின் உதவி தேவைப்படுபவர்களாக உள்ளனர்.
Ø அல்லாஹ்வே இப்பிரபஞ்சத்திற்கும் அதில் உள்ளவற்றிக்கும் அதிபதியாவான்
Ø அல்லாஹ்வின் ஆளுமையை எதிர்க்கும் ஆற்றல் யாருக்கும் இல்லை.
Ø அல்லாஹ்வின் அனுமதியின்றி படைப்பினங்களில் எந்த செயலும், அசைவும் இருக்காது.

தவ்ஹீத் அர் ரூபூபியாவின் அடிப்படைகளை நாம் திருமறையின் பின்வரும் வசனங்களில் பார்க்கலாம்.

“அல்லாஹ் தான் எல்லா பொருட்களையும் படைப்பவன். இன்னும் அவனே எல்லா பொருட்களின் பாதுகாவலன் ஆவான்” (திருக்குர் ஆன் 39 : 62)
”நிகழும் நிகழ்ச்சிகளெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் வேறு இல்லை. மேலும் எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ அவருடைய இதயத்தை அவன் நேர் வழியில் செலுத்துகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்” (திருக்குர் ஆன் 64 :11)

மக்காவில் இஸ்லாத்தை எதிர்த்த மக்கத்து குறைஷிகள் கூட ருபூபியத்தை வாயளவிலாது ஏற்றுக் கொண்டனர் என்பதை கீழ்காணும் திருமறை வசனம் தெளிவுபடுத்துகிறது
“(நபியே!) நீர் அவர்களிடம் “வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று கேட்டால், “யாவற்றையும் மிகைத்தவனும், எல்லாவற்றையும் அறிந்தவனுமாகிய அவனே அவற்றை படைத்தான்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்.

ஷிர்க்

ஷிர்க் எனப்படுவது பகிர்ந்து கொள்ளுதல், இணைந்து கொள்ளுதல் அல்லது கூட்டமைத்தல் என்று அர்த்தப்படும். இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஷிர்க் என்றால் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் செயல் ஆகும். ஷிர்க்கை மன்னிக்க முடியா பெரும் பாவம் என்று அல்லாஹ் கீழ்வரும் திருமறை வசனத்தில் கூறுகிறான் :
"அல்லாஹ்வையே வழிபடுங்கள். அவனுக்கு எதையும் இணை வைக்காதீர்கள்” (திருக்குர் ஆன் 4 :36)
“”நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்க மாட்டான். இதை தவிர மற்றதை தான் நாடியவர்களுக்கு மன்னிக்கிறான். யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக பெரும் பாவத்தையே கறபனை செய்கிறார்கள்” (திருக்குர்ஆன் 4 :48)

ஷிர்க்கின் வகைகள்
ஷிர்க் அர்ருபூபியா – அல்லாஹ்வின் ஆளுமையில் செய்யப்படும் இணைவைப்பு
ஷிர்க் அல் அஸ்மாஃவஸ்ஸிஃபாத் – அல்லாஹ்வின் குணங்கள் மற்றும் தன்மைகளில் செய்யப்படும் இணைவைப்பு
ஷிர்க் அல் இபாதா – அல்லாஹ்வுக்கு உரித்தான வணக்க வழிபாடுகளில் செய்யப்படும் இணைவைப்பு

Monday, March 16, 2009

தவ்ஹீத்

  • தவ்ஹீத் எனும் சொல் அரபி மொழியின் வினைச் சொல்லான வஹதாவில் இருந்து எடுக்கப்பட்டதாகும். வஹதா என்ற சொல்லுக்கு ஒருமைப்படுத்துதல் அல்லது ஒன்றாக்குதல் என்பது அர்த்தமாகும்.
  • அல்லாஹ்வை தனித்தவனாக, இணை துணையின்றி அவனுக்கே வணக்கம் செலுத்துவது கொண்டு ஒருமைப்படுத்துதல்
  • அனைத்து நபிமார்களின் கொள்கை
  • ஏகத்துவம் இல்லாமல் எச்செயலும் ஏற்று கொள்ளப்பட மாட்டாது
  • அனைத்து நபிமார்களின் கொள்கை
  • ஏகத்துவம் இல்லாமல் எச்செயலும் ஏற்று கொள்ளப்பட மாட்டாது
  • உலகில் தோன்றிய அனைத்து நபிமார்களும் சொன்ன அடிப்படை செய்தி ”அல்லாஹ்வையே வணங்குங்கள், ஷைத்தானை விட்டு விலகி இருங்கள்” (திருக்குர் ஆன் 16 :36)

தவ்ஹீதின் வகைகள் குர்ஆனிலோ, சுன்னாவிலோ தவ்ஹீத் வகைப்படுத்தப்படவில்லை. ஆனால் இஸ்லாமிய அறிஞர்கள் தவ்ஹீதை நாம் முழுமையாக புரிந்து கொள்ளும் பொருட்டு மூன்றாக வகைப்படுத்தியுள்ளனர்.

அவை

1. தவ்ஹீத் அர் ருபூபியாஹ் – அல்லாஹ்வின் ஆளுமையை (படைப்பாற்றலை) நம்புதல்

2. தவ்ஹீத் அல் அஸ்மாஃவசிஃபத் – அல்லாஹ்வின் திருநாமங்களிலும் அவனது குணாதிசயங்களிலும் அவனுக்கு ஈடு இணை இல்லை என்று நம்புதல்

3. தவ்ஹீத் அல் இபாதா – வணக்க வழிபாடுகள் முழுமையாக அல்லாஹ் ஒருவனுக்கே செலுத்துதல்

Sunday, March 15, 2009

நன்றி யூதனே!

யூத அரக்கனுக்கு இதயம் இருக்குமோ?
யுத்த இருள் நீங்க உதயம் பிறக்குமோ?
மானுடம் உலகில் மாண்டு விட்டதோ?
இல்லை…மாபாதகம் உலகைஆண்டு விட்டதோ?

ஆக்கிரமிப்பு என்றார்…அமோக வரவேற்பு!
விடுதலை என்றோம்…வெண் பாஸ்பரசு குண்டுகள்!
அழிப்போம் என்றார்…சாட்டுப்(chat) பேசினர்!
அமைதி என்றோம்…‘வீட்டோ’(Veto) வீசினர்!

மழலைகள் மடிந்தன என்றோம்…
இஸ்ரேல் மதில்களும் இடிந்தன என்றார்!
மானிடன் ஆத்மா என்றோம்…
இரண்டுமே குற்றங்கள் என்றார்!

முஸ்லிமே!முதல் கிப்லா தகர்ந்தது…
ஹரத்தில் கஃபா என்றோம்!
முஸ்லிம்கள் கதறினர்…
எல்லைக்கு வெளியே என்றோம்!

வாழ வழி கேட்டார்…
பாதையை வழி மறித்தோம்!
மீட்க படை கேட்டார்…
முகாமில் பூட்டி வைத்தோம்!
ஆக்கிரமிப்பை எதிர்த்தார்...

‘ஜிஹாத்’ அபத்தம் என்றோம்!
கலீபா எங்கே என்றார்...
பழங்கதை எதற்கு என்றோம்!
தொடர்ந்தோம்! தொடர்ந்தோம்!

இறை நேசர்களை சிறைக்குள் அடைத்தோம்!
பொது எதிரியை இமயமாய் வளர்த்தோம்!
தூய தியாகிகளை தூக்கிலே போட்டோம்!
வீர வரலாற்றை வீணே மறைத்தோம்!

இழிவு தரும் தீர்வுகள் பேசினோம்!
அழிவு தரும் அமைதிகள் காத்தோம்!!
பேசிய தீர்விலேஇஸ்லாம் இருந்ததா?
வீசிய பொதிகளில் விமோசனம் கிடைத்ததா?

முஸ்லிமே! இனியொருமுறை
பேசோம்!!!பேசோம்! பேசோம்!!
இனியொருமுறை பேசோம்!!!
இனிப்பேச்சு புதுமொழியில்…
ஒரே அணியின் பொறிமுறையில்…

முஸ்லிமே!தாகூத்தை வெட்டி வீழ்த்துவோம்…
உம்மத்தாய் ஒட்டி வாழ்வோம்…
கிலாபத்தை எட்டி மீள்வோம்…
ஷஹாதத் கொடி நட்டி ஆள்வோம்…
இன்ஷா அல்லாஹ்

அல்லா ரக்கா ரகுமான்

இந்து தேசியவெறியும்
இசுலாமியர் எதிர்ப்பு வெறியும்
பூத்துக்குலுங்கும் ‘ரோஜாவின்’
பார்ப்பன மணம் பரப்பி,

சிவசேனையின் செய்திப்படம்
மணிரத்தினத்தின் கரசேவை
பம்(பா)பொய்க்கு ஒத்து ஊதி,

இந்தியச் சுதந்திரத்தின் பொன்விழாவில்
வந்தே மாதிரத்தை
காந்தியின் கைராட்டை சுதியிலிருந்து
கழற்றி வீசி
சோனி இசைத்தட்டில்
சுதேசி கீதம் முழக்கி,
ஒரு வழியாக
இசைப்புயல் அமெரிக்கா
கைப்பாவைக்குள் அடங்கிற்று.

மும்பைக் குடிசைகளின் இதய ஒலியை
ரகுமான் “ஜெய் ஹோ! ஜெய் ஹோ!”
என பிய்த்து உதறிவிட்டார் என
தெருவில் வந்து கூத்தாடும் தேசமே!

பீகார் தொழிலாளிகளை
ராஜ்தாக்ரே கும்பல் பிய்த்து உரித்தபோது.. ”
அய்யகோ..!” என்று அலறியபோது
எங்கே போனது இந்தியப் பாசம்?

அல்லா ரக்கா ரகுமானின்
ஆர்மோனிய சுரப்புகளை
அலசிஆராய்ந்து உள்நுணுகி
உருகிவிவாதிக்கும் அன்பர்களே,

இசுலாமியர்களின் ஹார்மோன்
சுரப்பிகளையும் கருவறையிலேயே
தாலாட்டுகளையும் திரிசூலங்கள்
குதறி எடுத்தபோது, இந்த அளவு
இறங்கி வந்து விவாதித்ததுண்டோ நீங்கள்?

இசையிலே கொண்டுவந்து
ஏன் அரசியலை நுழைக்கிறீர்கள்
என்று ஆதங்கப்படுகிறீர்களோ!

ஏ.ஆர்.ரகுமான் இசைக்கும்
பாடலுக்கு மட்டுமல்ல
அவர் மௌனம் காக்கும்
அரசியலுக்கும் சேர்த்தே ஆடுகிறது
உங்கள் தலை.

மழலைச் சொல்லை
தீய்த்த எறிகணை…
கருச்சிதைந்த பெண்ணோடு
தெறித்த கரும்பனை..
இறந்த பின்னாலும்
பெண்னை புணர்ந்திடும் இனவெறி…
ஈழத்தின் துயரத்தை இசைக்க
முடியாமல் காற்றும் மூர்ச்சையாகும்….

இந்தச் சூழலில் ஒரு தமிழனென்ற முறையில்
தமிழில் பேசிய இசைப்புயல்
ஈழமக்கள் எரியுமிந்த வேளையில்
விருது வேண்டாமென்று கூட அல்ல…

வருத்தத்தோடு வாங்கிக்கொள்கிறேன்
என்றாவது பேசியிருக்கலாம்தானே!
“எல்லா புகழும் இறைவனுக்கே” என்பவர்
ஆஸ்கார் புகழுக்காக அடக்கி வாசிக்காமல்

“வராக நதிக்கரையோரம்” உருகும் இசைப்புயல்
இசுரேல் இனவெறியால் மேற்கு கரையில்
உயிர் உருகி உருக்குலையும்
பாலஸ்தீன மக்களுக்காக அமெரிக்க

மேலாதிக்கத்தால் நரம்புகள் அறுக்கப்பட்ட
இசைக்கருவிகளாய் தமது மூச்சையும்
இசைக்கமுடியாமல் பலியாகும் ஈராக்கிய மக்களுக்காக…..
ஒரு இசுலாமியன் எனுமடிப்படையில்
ஆஸ்கர் விருதை வேண்டாம் என்று கூட அல்ல…

ஆழ்ந்த சோகத்தோடு ஏற்கிறேன்
என்றாவது சொல்லலாம் தானே?
இந்த… சாதி, , இனம், அரசியலுக்கெல்லாம்
அப்பாற்பட்டது ரகுமானின் இசை அனுபவம்
என்போரே!சரிதான்!

இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு
உலகமயத்தின் சரக்காக இசைப்புயல்…
சரக்கு சந்தையைப் பற்றியல்லாமல்
வேறு எதைப்பற்றியும்
கவலைப்படுவதில்லை உண்மைதான்

நன்றி : துரை. சண்முகம்