Wednesday, May 6, 2009

நடு வீதி கண்ட நடுநிலை சமுதாயம்

அங்கங்கே ஒலி பெருக்கிக் குழாய்கள்
கருப்பும், சிகப்பும்,
வெள்ளையும், பச்சையும்,
புலியும், பிறையுமாய்
கொடிகளின் கோலாகலங்கள்
எங்கு நோக்கினும்
கேளுங்கள் தரப்படும் என்ற கோஷமும்
சில திக்குகளில் கேட்காமலே தரப்படும் என்ற சப்தமும்..
கேட்பதற்க்கு வேறென்ன இருக்கிறது
என்பதாய் ஆன்ந்த வெள்ளத்தில் அழுத்திப் பிடித்தது..

திடீரென்று ஒரே சமயத்தில்
பாரினில் அனைவருமே பாரி வள்ளலானார்கள்..
கரை வேட்டிகளின் அக்கறை..
பார்டர் புடவைகளின் பரிவு
அம்மாக்களின் அனுசரனை
ஐயாக்களின் அதிரடி அறிவிப்பு..
திடீரென்று ஒரே சமயத்தில்
பாரினில் அனைவருமே பாரி வள்ளலானர்கள்..

தடுமாறித்தான் போனோம்..
அன்பும்.. ஆறுதலும்
அறிவிப்பும் ஆர்ப்பரிப்பும்
சுனாமி அலையாய் சுருட்டிப் போட
தடுமாறித்தான் போனோம்.

நமக்குள்ளே பட்டி மன்றம்..
தொலைக்காட்சியா.. தாலிக்கொடியா..
ரெண்டு ரூபாயா.. ஒன்னேமுக்கால் ரூபாயா
சிங்கமா.. புலியா
மூஞ்சில் குத்தா..? முதுகில் குத்தா..?

திடீரென்றோ.. தேர்ந்தெடுத்தோ..
முடிவெடுத்தொம்.. இனி இவருக்குத் தானென்று
நாம் தான் நடுநிலை சமுதயமயிற்றே
நடு நிலையின் நடுவே
நடு நிலையோடு நம்மை
கூறு போட்டு பிளந்து
ஆளுக்கொரு கூட்டணியை
அணைத்துக் கொண்டோம்..

எனக்கு தொலைக்காட்சி..
உனக்கு தாலிக்கொடி..
எனக்கு இரண்டு ரூபாய்
என்க்கு முதுகு.. உனக்கு மூஞ்சி

அன்று முதல்..
நாம் அரும்பாடு பட்டு உழைத்து கிடைத்த
அத்தனைத் தொலைக்காட்சி ஸ்லாட்டுகளும்
தூள் கிளப்பத் தொடங்கியது..

உன்னை தெரியாதா எனக்கு..
உன் வண்டவாளம் தெரியாதா..?
அவன் ஏன் மாலை போட்டான்..
நீ ஏன் ஆதரவு கொடுத்தாய்
இரவு பகலாக உழைக்கவும் தயார்..
இன்னுயிரைக் கொடுக்கவும் தயார்..

இந்த சகோதரனுக்கு..
அம்மா வந்தால்..
காயல் பட்டினத்து முஸ்லிம்களை
சித்திரவதை செய்தது சரி தான்..
கோவையில் அப்பாவிகளை
தடாவில் போட்டு உருட்டியது சரி தான்..
கரசேவைக்கு தன் கட்சி
ஆட்களையே அனுப்பியது சரி தான்..
தலித் முஸ்லிம் என்று
தனி முத்திரை தந்தது சரி தான்..
மோடிக்கு போர்வை போர்த்தி
பாராட்டியது கூட
சரிதான்.. சரிதான்.. சரியேதான்..



அந்த சகோதரனுக்கு..
ஐயா வந்தால்..
தாம்பரத்தில் பள்ளி இமாம் மீது
தடியடி நடத்தியது சரி தான்..
கோவையில் போலீஸ்காரர்களுக்கு
துணை போனது சரி தான்..
முஸ்லிம் தீவிரவாதிகளென்று
முத்திரை குத்தியது சரி தான்..
குஜராத் அரசைக் கலைக்காமல்
ஒத்தாசையாய் இருந்தது கூட
சரிதான்.. சரிதான்.. சரியேதான்..

தேர்தல் முடிந்து விட்டது..
முடிவும் தெரிந்து விட்டது..
ஜனநாயக நாயகன் தேர்வாகி விட்டான்..
எதிரி.. எதிர்கட்சியில் அமர்ந்து விட்டான்..
கோஷம் போட்ட மனிதன்
ஓய்ந்து விட்டான்..
ஒலிப்பெருக்கியும், கலர் கொடிகளும் கழன்று
அடுத்த தேர்தல் வாக்குறுதிக்கு
அடுக்கி வைக்கப்பட்டன..

அல்லாஹ் அனுமதித்த சட்டம்..
அவன் தூதர் காட்டித்தந்த வாழ்க்கை..
நமக்கு எட்டாக்கனி.. கஷ்டக்கனி..
நமக்குத் தான்
இரண்டாம் அத்தியாயத்தின்
இருநூற்றி ஐம்பத்தறாம் வசனம் போதுமே..


இழிவாம் ஜனநாயக அசிங்கத்தைக் காக்க
இன்னுயிரையும் மாய்த்து மகிழ்வோம்.

சகோதர மாமிசத்தோடு நம் படைப்பின்
நோக்கத்தையும்
சேர்த்துச் சுவைப்போம்..
ஏப்பம் எக்காளம் ஊதும் வரை
சப்தமாய் வரும்..!!

நன்றி : பார்வை மே 2006

No comments: