Sunday, July 11, 2010

இரண்டு தீமைகளில் சிறிய தீமையை செய்யலாம் என்பதால் வாக்களிக்கலாமா – இஸ்லாமிய பார்வை

ஜனநாயகம் இஸ்லாத்திற்கு விரோதமனாது என்பதை நன்கு உணர்ந்தும், இஸ்லாத்திலும் இருந்து கொண்டு ஜனநாயக பதாகையை ஏந்தி கொண்டிருக்கும் முஸ்லீம்கள் தங்கள் வாதத்துக்கு வலுசேர்க்க இரண்டு தீமைகள் காணப்படும் போது சிறு தீமையை ஆதரிக்கலாம் என்ரு கூறுகின்றனர். பிரபல இஸ்லாமிய தலைமைகள் என கருதப்படும் சிலரும் இக்கருத்தை ஆதரிப்பது தான் விநோதம்.

ஜனநாயகம் தவிர மாற்று தீர்வே இல்லை எனும் தொனியில் ஜனநாயகத்தை எப்படியாவது இஸ்லாமிய முலாம் பூசி இஸ்லாமிய ஜனநாயகம் என நிலைநாட்ட துடிப்பது உண்மையில் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கும் இறைதூதரின் வழிமுறைக்கும் மாறாகவே இருக்கின்றது. பெருமானார் (ஸல்) அவர்களுக்கு குறைஷிகளுடன் அதிகார பகிர்வு செய்ய வாய்ப்பு கிடைத்த போது அல்லாஹ் அதை மறுத்து " இறை நிராகரிப்பாளர்களே நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன், நான் வணங்குபவற்றை நீங்கள் வணங்க மாட்டீர்கள்................ உங்களுக்கு உங்கள் வழிமுறை, எங்களுக்கு எங்கள் வழிமுறை " என்று அல்லாஹ் வசனத்தை தெளிவாக இறக்கி அதிகார பகிர்வு நிராகரிப்பாளர்களுடன் சாத்தியமில்லை என்று தெளிவுபடுத்துகிறான்.

ஆனால் இரண்டு தீமைகளில் ஒன்றை தேர்ந்தெடுப்பது என்பது அது இஸ்லாமிய அடிப்படையில் சரியா தவறா என்று ஆராய்வதோ இல்லை எது வரை அவ்வழியில் அல்லது எந்தெந்த நிலைகளில் அதில் ஈடுபடலாம் என்றோ தெளிவுபடுத்தாமல் இரண்டும் தீமை தான் இருந்தாலும் அதில் சிறிய தீமையை தேர்ந்தெடுப்பதன் மூலம் சமூகத்திற்கு நன்மை கிடைக்கும் என வாதிடுகின்றனர்.

இரண்டு தீமைகளில் சிறியதை தேர்ந்தெடுப்பது என்பது எப்போது சாத்தியப்படும் என்றால் இரண்டு தீமைகளூம் இஸ்லாத்தால் விளக்கப்பட்டு எது சிறிய தீமை என்பதும் சொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது குரான் சுன்னாவின் அடிப்படையில் தெளிவுபடுத்தப்பட வேண்டும். உதாரணத்துக்கு பசியால் சாகும் தருவாயில் விலக்கப்பட்டதும் அனுமதிக்கப்பட்ட உணவாக மாறுவது போல். உதாரணத்துக்கு

1. நாம் சிறிய தீமை என்று நினைப்பது சில வேளைகளில் எதிர்மறையாக முடியலாம். அப்படி சொல்லித் தான் அமெரிக்காவில் முஸ்லீம்கள் 2000-ல் கிளிண்டனுக்கு எதிராகவும் புஷ்ஷுக்கு ஆதரவாகவும் ஓட்டளித்தனர். 2008-ல் ஒபாமாவுக்கு வாக்களித்தனர். விளைவுகள் இன்னும் பயங்கரமாக அல்லவா இருந்தது. இந்தியாவில் கூட பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிராக போராடும் மக்கள் கலை இலக்கிய கழகம் 2006 பாராளுமன்ற தேர்தலில் ஒரு போஸ்டர் ஓட்டினார்கள். எந்த கயவனுக்கு ஓட்டு போட போகிறீர்கள் பாபரியை இடித்தவர்களுக்கா ? அல்லது செங்கல் பூஜைக்காக பள்ளியை திறந்து விட்டவர்களுக்கா?

2. வாக்களிப்பதை தவிர வேறு வாய்ப்பிலை எனும் போது நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் வாக்களிக்கலாம். வாக்களிக்காவிட்டால் சிறை செல்ல வேண்டும் அல்லது இறக்க நேரிடும் எனும் சூழ்நிலையில் வேண்டுமானால் வாக்களிக்கலாம். அப்போது கூட வாக்கு சீட்டை செல்லாமலாக்கலாம்.

3.வாக்களிப்பாமல் இருப்பதன் மூலம் முடிவுகள் நமக்கு பாதகமாக மாறுவதற்கு நாமே வழிவகுக்கிறோம் என்றும் சிலர் கூறுகினறனர். அப்படியென்றால் நம்மை விட சமூகத்தில் செல்வாக்கு பெற்றிருந்த போதும் ஆட்சி பகிர்வு கிடைத்த போதும் பெருமானார் (ஸல்) அவர்கள் அதை புறக்கணித்ததை முஸ்லீம்களுக்கு பாதகமான முடிவாக கருதுகின்றனரா?

4.முஸ்லீம்களுக்கு பயன் என்றாலும் அது ஷரீயாவால் சொல்லப்பட்டிருக்க வேண்டும். மேலும் அது இஸ்லாமிய நெறிமுறையிலேயே நிறைவேற்றப்பட வேண்டும். ஒரு விஷயம் முஸ்லீம்களுக்கு பயனளிக்கும் என்பதை நம் சொந்த அனுமானங்கள் மூலம் நாம் முடிவு செய்வோம் என்றால் அது மனோஇச்சைக்கு அடிமையாவதற்கு சற்றும் குறைவானதல்ல.

எனவே குப்ரை அடிப்படையாக கொண்ட ஒரு அரசியல் அமைப்பில் ஓட்டளிக்க ஒரு முஸ்லீமுக்கு அனுமதி இல்லை. ஓட்டளிப்பது எப்படி என்பது மிகப் பெரிய விஷயமல்ல மாறாக எந்த இலக்குக்காக, நோக்கத்துக்காக வாக்களிக்கிறோம் என்பதே இஸ்லாத்தின் பார்வையில் முக்கியமானதாகும்.

எனவே குப்ரான ஆட்சி அமைப்பில் பங்கு பெறுவதை விட முஸ்லீம்கள் ஒன்றுபடுதல், தங்களுக்குள் சீர்திருத்தம் மற்றும் பிற மக்களுக்கு இஸ்லாத்தின் பால் அழைப்பு கொடுத்தல், அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தல், ஒடுக்கப்பட்டோருக்காக போராடுதல், இஸ்லாமிய ஆட்சிமுறையின் மேன்மையை மக்களுக்கு எடுத்துரைத்தல், குரான் சுன்னா அடிப்படையில் ஒரு சமூகத்தை வார்த்தெடுத்தல் மூலம் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதே ஒரு முஸ்லீம் அதிக கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும்

ஓட்டளிப்பது குறித்து இஸ்லாமிய நிலைப்பாடு

வாக்களிப்பது சம்பந்தமாக இஸ்லாத்தின் நிலைப்பாட்டை நன்கு ஆராய்ந்து பார்த்தோமென்றால் நாம் வாக்களிப்பது யாருக்கு என்பதையும், நம் வாக்கின் மூலம் வெற்றி பெற்றால் அவர் என்ன செய்ய போகிறார் என்பதையும் அறிந்து கொள்வது ஒரு முஸ்லீமுக்கு முக்கியமானதாகும். ஏனென்றால் "நன்மையிலும் பயபக்தியிலும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து கொள்ளுங்கள், பாவத்திலும் பகைமையிலும் ஒத்துழைக்காதீர்கள்" என்று இறைவன் திருமறையில் கூறுவதை போல் நாம் செய்ய இருக்கும் காரியத்தின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும்.

சிபாரிசு சம்பந்தமான குரான் வசனம்

கீழ் காணும் 2 நிலைகளில் வாக்களிக்க இஸ்லாத்தில் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

1.இஸ்லாமிய அரசில் கலீபாவை தேர்ந்தெடுக்க வாக்களிப்பது - உமர் (ரலி) அவர்களின் மறைவுக்கு பின் கலீபாவை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் "ஒரு ஆண், பெண்ணையும் விட மாட்டேன் அவர்களின் கருத்தறியும் வரை" என்று கூறி அனைத்து மக்களிடமும் கருத்து கேட்டதற்கு ஒப்பாக நாமும் கலீபாவை தேர்ந்தெடுக்க வாக்களிக்கலாம்.

2.இஸ்லாமிய அரசின் ஆலோசனை குழுவுக்கு அந்தந்த பகுதி மக்களின் கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஆலோசனை குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வாக்களிப்பது - மதீனாவில் அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தாரிடையே உங்களிலிருந்து பன்னிரெண்டு தலைவர்களை தேர்ந்தெடுத்து கொள்ளூங்கள் உங்களை பிரதிநிதிப்படுத்த என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதை போல் நாமும் தேர்ந்தெடுக்கலாம்.

ஒரு நாட்டின் பாராளுமன்ற தேர்தலில் அல்லது ஒரு மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் என்ன செய்யப் போகிறார் என்பதை நாம் கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

1. அரசாங்கத்தை கேள்வி கேட்பது அல்லது பொறுப்புகளை சுட்டி காட்டுதல்
2. சட்டம் இயற்ற உதவி செய்தல் அல்லது சட்டம் இயற்றுதல்
3. அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் ஒப்பந்தங்கள், தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பது.

இதில் முதலாவதாக இஸ்லாம் சொல்லுகின்ற அடிப்படையில் அரசாங்கத்தை கேள்வி கேட்பது அல்லது அதன் பொறுப்புகளை நினைவுபடுத்துதல் என்பது இஸ்லாத்துடன் மோத கூடிய ஒன்றல்ல. ஆனால் இஸ்லாத்தை பொறுத்த வரை சட்டம் இயற்ற கூடிய அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உள்ளதாலும், சட்டத்தை அமுல்படுத்த மட்டுமே மனிதனுக்கு அதிகாரம் உள்ளதாலும் இரண்டாவது செயலுக்கு இஸ்லாம் அங்கீகாரம் அளிக்கவில்லை. அது போல் இஸ்லாத்துக்கு மாற்றமான நெறிமுறையில் உள்ள அரசுடன் ஒத்துழைப்பதையும் இஸ்லாம் அங்கீகரிக்காது என்பது தெளிவானதே.

எனவே எப்படி வாக்களிக்கின்றோம் என்பதை விட எதற்காக வாக்களிக்கின்றோம் எனற விஷயத்துக்கே இஸ்லாம் முக்கியத்துவம் அளித்திருப்பதை நாம் உணர்ந்தால் இன்றைய இஸ்லாத்துக்கு முரணான ஆட்சியமைப்பில் நிச்சயமாக எக்கட்சிக்கும் வாக்களிப்பது இஸ்லாமிய ஷரீயாவுக்கு முரணானதே எனும் கருத்தேக்கு வர வேண்டியதிருக்கிறது.