Wednesday, August 25, 2010

கிலாபா - உம்மத்தின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்

இஸ்லாமிய கிலாபத் வீழ்த்தப்பட்டு 89 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் மீண்டும் முழுமையான இஸ்லாமிய வாழ்வு மலர கிலாபத்தை மீட்டெடுக்க வேண்டிய கடமையை நம் நினைவுகளில் புதுப்பித்து கொள்ள கடமைப்பட்டு இருக்கிறோம். 1924 ல் கிலாபத் வீழ்த்தப்பட்ட பிறகு முஸ்லீம் உம்மா அல்லாஹ்வை விட தங்கள் மேற்கத்திய முதலாளிகளை திருப்திபடுத்த நினைக்கும் மோசமான ஆட்சியாளர்களை பெற்றது என்றால் அது மிகையானதல்ல. இந்த அஸதுகள், முபாரக்குகள், ஜர்தாரிகள் போன்ற சர்வதிகாரிகள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மேலாதிக்கத்துக்கு குடை பிடித்து கொண்டிருப்பதால் இச்சமூகம் உலகியல் ரீதியாகவும் பின்னடைவை சந்தித்து கொண்டிருக்கின்றது.

உதாரணத்திற்கு

வறுமை - 2002 எக்கானமிஸ்ட் பத்திரிகை நடத்திய ஆய்வின் படி ஐந்தில் ஒரு அரபியர் ஒரு நாளைக்கு வெறும் 2 டாலருக்கும் கீழாகவே சம்பாதிக்கின்றனர்.

ஊழல் - ட்ரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் ஆய்வின் படி ஊழல் மலிந்துள்ள 10 நாடுகளில் 8 முஸ்லீம் நாடுகள்.

போர் - ஐ.நா சபை தகவல் படி தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஆப்கனில் 20 இலட்சம் பெண்கள் மற்றும் ஈராக்கில் 7 1/2 இலட்சம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்.

இச்சூழலை இஸ்லாம் இவ்வுலகில் ஆளும் கொள்கையாக இருந்த போது ஒப்பிட்டு பாருங்கள்

பொருளாதாரம் - இரண்டாம் உமர் என அழைக்கப்படும் உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களின் ஆட்சிகாலத்தில் ஜகாத்தை வாங்க தகுதியான ஆட்கள் இல்லாமல் கஜானா நிரம்பி வழிந்தது.

ஆட்சி - உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) ஆட்சிகாலத்தில் ஒரு மனிதர் தன் தனிப்பட்ட விவகாரங்களை ஆலோசிக்க வந்த போது அரசாங்க வரிப்பணத்தில் வாங்கிய எண்ணையில் எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்து தன் சொந்த விளக்கை ஏற்றும் அளவுக்கு அரசாங்க சொத்துக்களை அமானிதமாக கருதினார்.

பாதுகாப்பு : ஒரு பெண்ணின் ஹிஜாப் சேதப்படுத்தப்பட்ட போது அதற்காக அப்பாஸிய கலீபா முத்தஸிம் (ரஹ்) அப்பெண்ணின் கண்ணியம் காக்க ஒரு படையையே ஒன்று திரட்டினார்கள்.


சமூகத்தின் உண்மையான பிரச்னை - தலைமைத்துவமே

முஸ்லீம் உம்மாவின் நலனில் அக்கறை கொண்ட முஸ்லீம் சிந்தனையாளர்கள் சிலர் முஸ்லீம் நாடுகள் பொருளாதர வலிமை இல்லாததே முஸ்லீம் உம்மாவின் பிரச்னைக்கு காரணம் என நினைப்பது தவறு. ஏனென்றால் உலகின் இயற்கை வளங்களில் 60 சதவிகிதம் முஸ்லீம் நாடுகளிலேயே கிடைக்கின்றன. 54 முஸ்லீம் நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான் மாத்திரம் ப்ரான்ஸ் மற்றும் இங்கிலாத்தின் கூட்டு நிலப்பரப்பை கொண்டுள்ளது. உலகின் 6வது மிகப் பெரும் மனித வளமும் கொண்டுள்ளது. மேலும் பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, இந்தோனேஷியா, சிரியா, சவூதி அரேபியா மற்றும் மொராக்காவின் ராணுவ பலத்தை ஒன்றாக்கினால் ஈராக்கில் இருந்த அமெரிக்க படைகளை விட 20 மடங்கு அதிக ராணுவத்தை திரட்ட முடியும். எனவே முஸ்லீம் நாடுகளில் வளங்களில் பிரச்னை இல்லை. அவை பங்கிடுப்படுவதில் தான் பிரச்னை உள்ளது. இஸ்லாமிய அடிப்படையில் பங்கிடப்படாமல் மேற்கின் கட்டளை படி நடப்பதில் தான் பிரச்னை புதைந்துள்ளது.

எனவே பிரச்னை சமூக வளங்களில் அல்ல, மாறாக இஸ்லாத்தின் அடிப்படையிலான ஒருங்கிணைந்த தலைமை இல்லாததே பிரச்னையின் ஆணிவேராகும். நபி (ஸல்) பரிந்துரைத்த, நம்மை பாதுகாக்கும் கேடயம் இல்லாததே பிரச்னையாகும். அக்கேடயத்தை குறித்து முஸ்லீமில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீத் பின் வருமாறு பேசுகிறது :

"உங்களின் இமாம் (கலீபா) ஒரு கேடயம் ஆவார், அவரின் பின்னால் போராடுவதற்கும் உங்களை பாதுகாத்து கொள்வதற்கும்"

நம்மை படைத்த சர்வ வல்லமையுள்ள இறைவன் ஆட்சியதிகாரத்தில், மக்களின் பொருளாதர விவகாரங்கள், சமூக பிரச்னைகள் உள்ளிட்ட அனைத்திலும் குரான் மற்றும் சுன்னாவை கொண்டே தீர்ப்பளிக்க சொல்லியுள்ளான். இறைவனின் வேதத்தின் படி ஆட்சி செய்யாத முஸ்லீம் பெயர்தாங்கிகள் அல்லது நிராகரிப்பாளர்கள் குறித்து நாம் திருப்திபட்டு கொள்ள கூடிய மக்களாக இருந்தால் நம் நிலை பின் வரும் குரான் வசனம் குறிப்பதை போல் தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

நபியே ! அல்லாஹ் இறக்கி வைத்ததே கொண்டு அவர்களிடம் தீர்ப்பளிப்பீராக.அவர்களின் ஆசாபாசங்களை பின்பற்றினால் அவர்கள் இறைவன் இறக்கி வைத்ததிலிருந்து உங்களை திருப்பி விடக் கூடும் (திருக்குரான் 5:49 வசனத்தின் கருத்து)

கிலாபத்தை மீண்டும் நிலைநாட்டுவதின் மூலம் - நீதித்துறை, சமூக விவகாரங்கள், பொருளாதரம், குடும்ப விவகாரங்கள் இப்படி வாழ்வின் அத்துணை நிலைகளிலும் குரான் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் வழிகாட்டுதல் பெறக் கூடிய முழுமையான இஸ்லாமிய அரசை அமைப்பதின் மூலமே குப்ரின் ஆதிக்கம் மற்றும் பாதிப்பிலிருந்து விடுபட்டு முழுமையான இஸ்லாத்தை நம் வாழ்வில் கொண்டு வர முடியும் என்பது நிச்சயம். வல்ல இறைவன் அப்பாக்கியத்தை நம் வாழ்விலேயே காணும் பாக்கியத்தை அளிப்பானாக.

4 comments:

Mohamed Ismail MZ said...

கிலாபத்தை எப்படி நிலை நாட்டுவது என்பதில் உங்களுக்கு ஏதேனும் வரைமுறை இருக்கிறதா?

ஆயங்குடி மீடியா said...

கிலாபத்தை நிலைநாட்டுவதென்பது மார்க்க கடமையல்ல.கிலாபத்தை நிலைநாட்டுவதென்பது ஒரு தனிமனிதனோ அல்லது குழுவோ தீர்மானிக்கக் கூடிய விஷயமல்ல. உலகில் தோன்றிய அத்துனை நபிமார்களும் கிலாபத்திற்காக பாடுபடவில்லை. அவர்களுடைய பணி மக்களிடம் இறைச்சட்டங்களை போதிக்கக் கூடிய மற்றும் இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைக்கக் கூடிய தாவா பணியாக மாத்திரமாகவே இருந்தது. கிலாபத்தை உருவாக்குவதென்பது அல்லாஹ்வின் புறத்தில் உள்ளதாகும்.

அருளாளனின் அடிமை said...

சகோதரர் unmai virumbi அவர்களே: கிலாஃபத்தை நிலைநாட்டுவது மிக எளிமை 1,குர் ஆனை அர்த்தம் உணர்ந்து படியுங்கள் 2,பின்பு ஒரு சிறு குழுவை அமைத்து (உங்கள் நண்பர்கள், குடும்பத்தார் etc...) கூட்டாக சேர்ந்து படியுங்கள் 3,அல்லாஹ்வின் வசனங்கள் இந்த காலகட்டத்திற்க்கு எப்படி ஒத்து போகின்றது என்று பாருங்கள், சிந்தியுங்கள், ஆராயுங்கள் 4,பின்னர் அல்லாஹ்வின் கட்டளைகளை வாழ்வில் நடைமுறை படுத்துங்கள் 5,பிறருக்கு எத்திவையுங்கள் 6,இஸ்லாம் அல்லாத அனைத்து ஜாஹீலிய(அறியாமை) கொள்கைகளின் தவறை மக்களுக்கும் விளக்குங்கள்.......... எனக்கு தெரிந்தது இவளவு தான் (குறிப்பு: ஆயங்குடி மீடியா கூறுவது போல் கிலாஃபாவை அல்லாஹ் உருவாக்குவான் என்று கூறிக்கொண்டு வீட்டில் உட்கார்ந்து விடாதீர்கள் "எந்த சமுதாயம் தன்னை திருத்திக்கொள்ள விரும்பவில்லையோ அல்லாஹ் அந்த சமுதாயத்தை திருத்துவதில்லை -அல் குர்ஆன்" கிலாஃபாவை அல்லாஹ் உருவாக்குவான் என்பது உண்மை தான் அதில் மாற்றுக்கருத்து இல்லை அந்த கிலாஃபா வருவதற்க்கு நீங்கள் என்ன முயற்ச்சி செய்தீர்கள்? சும்மா வீட்டில் அமர்ந்திருந்தால் கிலாஃபா வந்துவிடுமா அல்லது களைஞருக்கும் அம்மாவுக்கு மாற்றி மாற்றி ஆதரவு தெரிவித்தால் கிலாஃபா வந்துவிடுமா சிந்தியுங்கள் சகோதரா)

Anonymous said...

அஸ்ஸலாமு அழைக்கும்,
இந்த சமுதாயம் தலைமைத்துவம் &ஜமாஅத் பற்றி குரான் ஹதீஸில் வந்துள்ளதை உணராதவரையில் ஒற்றுமை படுவது சாத்தியம் இல்லை.அது கட்டாய கடமை என்று சொல்லும் அளவு நபி(ஸல்)அவர்கள் அதிகமாகவே கூறி சென்றுள்ளார்கள் அவைகள் சம்பந்தமாக சிலதை எடுத்துவைக்கிறேன் முஸ்லிம்கள் உணரவேண்டும் என்பதற்காக.
"பிரிவுள்ள காலங்களில் முஸ்லிம்களின் ஜமாத்தையும் அதனுடைய தலைவரையும் பற்றிப் பிடிப்பீராக''
புஹாரி,முஸ்லிம்
''யார் தனக்கென ஓர் தலைவர் இல்லாத நிலையில் மரணிக்கின்றாரோ நிச்சயமாக அவரது மரணம் ஜாஹிலிய்ய மரணமேயாகும்''. முஸ்தத்ரக் ஹாகிம்

''தனது கழுத்தில் பைஅத்(உடன்படிக்கை) இல்லாத நிலையில் யார் மரணிக்கின்றாரோ நிச்சயமாக ஜாஹிலிய்ய மரணமேயாகும்''. முஸ்லிம்

''யார் ஒரு சான் அளவேனும் முஸ்லிம்களின் ஜமாத்துக்கு மாறு செய்கின்றாரோ அவர் தனது கழுத்திலிருந்து இஸ்லாத்தின் வளையத்தை கலைந்தவராவர்''. முஸ்தத்ரக் ஹாகிம்

சஹோதரர்களே பிரியாமல் தலைமத்துவத்தொடு ஜமாத்தாக இருப்பது எல்லா நபிமார்களுக்கும் அல்லாஹ் போட்ட கட்டளை இதோ ஆதாரம்
"(நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும் இப்ராஹீம் மூஸா ஈசா ஆக்யோருககும் நாம் உபதேசித்ததும் என்னவெனில் தீனை நிலைநாட்டுங்கள் அதில் (பல பிரிவுகளாக)பிரிந்து விடாதீர்கள் என்பதேயாகும்''.
42 :13