Tuesday, December 28, 2010

தீமை ஒழிப்புப் போராட்டம்: மிகக் கொடிய தீமைகளே முதல் இலக்குகள்

தீமை ஒழிப்பின்போது பெரிய தீமைகளை ஒழிப்பதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். அந்தவகையில்இறைசட்டங்கள் அல்லாத இஸ் லாத்திற்கு முரணான மனித சட்டங்கள்தான் முதலில் ஒழிக்கப்பட வேண்டிய மிகக் கொடிய தீமைகள் என இஸ்லாமிய அறிஞர்கள் சுட்டிக் காட்டி யுள்ளனர். இதனை ஷஹீத் ஸெய்யித் குதுப் அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள்: நன்மையை ஏவுகின்றபோது முதலில் பெரிய நன்மைகளையே ஏவவேண்டும். இந்த வகையில் உலூஹிய்யத் (தெய்வீகத்தன்மை) அல்லாஹ்விற்கு மாத்திரம் உரியதென ஏற்றுக் கொள்ளலும் அதன்படி இஸ் லாமிய சமூகத்தை கட்டியெழுப்புவதுமே முன்னு ரிமை கொடுக்கப்பட வேண்டிய நன்மையாகும்.

அவ்வாறேதீமைகளைத் தடுக்கும் பணியின்போதும் அதிகொடிய தீமை களை ஒழித்துக் கட்டுவதற்கே முதன்மை வழங்க வேண்டும். இந்த வகையில் தாகூத்கள்’ எனப்படும் எல்லைமீறிய அக்கிரமக்காரர்களின் ஆட்சி ஆதிக்கம் செலுத்துவதும்இஸ்லாமிய ஷரீஆ சட்டத்திற்கு முர ணாக இவர்கள் மக்களைத் தமது அடிமைகளாக நடத்துவதும்தான் மிகக் கொடிய தீமைகளாகும்.

நபி (ஸல்) அவர்களை ஈமான்கொண்ட ஆரம்பகால முஸ்லிம்கள் ஹிஜ்ரத் மேற்கொண்டு ஜிஹாத் புரிந்ததெல்லாம் மக்களை அல்லாஹ் வின் சட்டங்களுக்கு மாத்திரம் கட்டுப்பட வைக்கும் ஓர் இஸ்லாமிய அரசை முதலில் தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவே. இஸ்லா மிய ஷரீஆ சட்டங்களின் அடிப்படையில் அந்த அரசு ஆளப்படும். இந்த மகத்தான இலக்கை அடைந்த பின்னர்தான் முஸ்லிம்கள் கிளை அம்சங்களுடன் தொடர்பான நன்மை தீமைகளில் கவனம் செலுத்தும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். இந்த இஸ்லாமிய அரசு தோற்றம் பெறுவ தற்கும்முஸ்லிம் சமூக அமைப்பு உருவாவதற் கும் முன்னதாக இத்தகைய கிளை அம்சங்களில் தங்களது முயற்சியை அவர்கள் அறவே செல விடவில்லை.

மார்க்கம் நிலைத்திருப்பதற்கான வலுவான அடிப்படை இடப்பட்டதன் பின்னர் அதன்மீதுதான் இந்தக் கிளை அம்சங்கள் நிலைபெற்று இருக் கும். எனவேநன்மையை ஏவிதீமையைத் தடுக்கும் பணியின்போது நடைமுறை யதார்த்தத்தின் தேவையைக் கட்டாயம் கவனத்திற் கொள்ள வேண்டும் என்ற கோணத்தில்தான் தஃவா புரி யப்பட வேண் டும். அப்படியாயின் ஏவப்பட வேண்டிய முக்கியமான பாரிய நன்மை கள்ஒழிக்கப்பட வேண்டிய மிகக் கொடிய தீமைகள் என்ற வட்டத்தி லான பணிகள் முதலில் முடிவடைய வேண்டும். அதற்கு முன்பாக ஏவப்படவேண்டிய கிளை அம்சங்களுடன் தொடர்பான நன்மைகள்அதனோடு தொடர்பான பாதிப்பு குறைந்தஒழிக்கப்பட வேண்டிய தீமை கள் என்ற வட்டத்திலான பணிகள் இத் தகைய தருணத்தில் ஆரம்ப மாக மாட்டாது. இவ்வாறான வழிமுறைதான் இஸ்லாமிய சமுதாயம் முதன்முதலாக நிர்மாணிக்கப்பட்ட பொழுது கடைப்பிடிக்கப்பட்டுள்ளது". (பீ லிலாலில் குர்ஆன்: பாகம்: 11, பக்:50)                                                                                          
இதன்மூலம் தாஈக்கள் தங்களையும் தங்களுடனிருப்பவர்களையும் அறிவுரீதியாக வளர்த்துக் கொள்ளும் பணிகளில் ஈடுபடுதல்,இஸ்லா மிய ஒழுக்க மாண்புகளையும் மற்றும் இபாதாக்களின் சட்டங்களையும் அவர்களுக்குக் கற்பித்தல் போன்ற விடயங்களைத் தவிர்ந்துகொள்ள வேண்டும் என்றோவிளக்கித் தடுப்பதனூடாக நீக்க முடியுமான கிளை ரீதியான தீமையைத் தடுக்காது தவிர்ந்துகொள்ள வேண்டுமென்றோ கருதலாகாது. இருப்பினும்,மனோ இச்சையின் மாயைக்கு முன்னால் இவர்கள் மயங்கிவிடக் கூடாது என்பதுதான் நாம் விடுக்கும் மிகத் தெளிவான ஓர் அழைப்பாகும்.

சிறிய சிறிய தீமைகளை எதிர்ப்பதோடு போதும் என்ற போலியான மனப்பாலைக் குடிக் கச் செய்து இஸ்லாத்திற்கு முரணான ஆட்சி அதி காரம் செலுத்துதல் என்ற கொடிய தீமையை இட் டும் வாளாவிருப்பது தான் இந்த மாயை ஏற்படுத்தும் பயங்கர நிலையாகும். இக்கொடிய தீமைக் கெதிராக வெகுண்டெழுந்து சத்தியத்தைத் துணி வோடு எடுத் துக்கூறாது நஜீஸை நீக்குதல்,ஸஜதா ஸஹ்வு போன்ற பாடங்களில் மயிர்பிளக்கும் ஆய்வுகளை மக்களுக்கு வழங்கும் வெறும் உபதேசகர்கள் என்ற அளவோடு இவர்கள் திருப்தியடைந்து விடுகின்றனர்.

தாகூத்கள் பற்றியோமுஸ்லிம்களை ஒரு கொடியின்கீழ் ஒன்றி ணைத்துஅவர்களைப் பயிற்றுவித்துமுழு அளவிலான பரிபூரணமான எழுச்சியை நோக்கி அவர்களது முயற்சிகள் சிதறிச் செல்லாது முனைப்புப் படுத்துவதன் அவசியம் குறித்தோ இவர்கள் தங்களது பேச்சுக்களில் சாடையாகத் தொட்டுக் காட்டுவதுகூடக் கிடையாது.

மனித குலத்தை, "அதன்மீது சுமத்தப்பட்டிருந்த பளுவை இறக்கியும்,போடப்பட்டிருந்த விலங்கு களை உடைத்தும்" விடுதலை பெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்வதற்காகவே அல்லாஹ் தனது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை அனுப்பி வைத்தான். போடப்பட்டிருந்த விலங்கு களோ சொல்லும் தரமன்று. இதன்பின்னர் வர லாற்றில் பூமிப் பந்தின் சந்துபொந்துகளில் எல்லாம் இந்த அரசி யல் கட்சிகளை நட்டிவிட்டதன் மூலம் மீண்டுமொருமுறை மனித குலத்தை யூதர்கள் விலங்குகளிட்டு அவல நிலைக்கு இட்டுச் சென்றுள் ளனர். எனவே,இவ்விலங்குகளை உடைத்து மனித குலத்தை மீட்டெ டுப்பதற்கும் இதன் ஒடுக்குமுறைகளால் அவஸ்தைப்பட்டு துன்பப்படும் முஸ்லிம் சமூகத்தின் புத்திரர்களை மீட்டெடுப்பதற்குமான ஒரு காத்தி ரமான இஸ்லாமிய எழுச்சி பீறிட்டு எழுவது தவிர்க்க முடியாத தேவையாகும்.

உண்மையில்இத்தகையதொரு எழுச்சிக்கான முன்னோடியாக தஃவாப் பணியை முன்னெடுத்துச் செல்வது எந்தளவு பாரிய பணி என்பதை ஷஹீத் ஸெய்யித் குத்ப் (றஹ்) அவர்களின் கீழ் வரும் வாசகங்கள் துள்ளியமாகத் தெளிவுபடுத்துகின்றன.

"உண்மையில் அது மகத்துவமானஒரு பாரிய பணியாகும். மனித குலத்தை கண்காணிக்கும் பணியாகும். அவர்களது வாழ்வோடும் மர ணத்தோடும் தொடர்பான பணியாகும். அவர்களது சுபீட்சத்தோடும் அவலத்தோடும் தொடர்பான பணியாகும். அவர்களுக்கு நற்கூலி கிடைப்பதோடும்தண்டனை வழங்கப்படுவதோடும் தொடர்பான பணியாகும்.

இந்தவகையில் அல்லாஹ்வின் தூது இம்மனித குலத்திற்கு எத்திவைக் கப்பட்டால் அது அதனை மனப்பூர்வமாக ஏற்று அடியொற்றி உலகிலும் மறுமையிலும் சுபீட்சத்தை அடைந்து கொள்ளும். இல்லையெனில்அதற்கு இந்தத் தூதை எட்டச் செய்யாதிருப்பதன் மூலம் அது தன் ரப்பிடம் நியாயம் காட்டித் தப்புவதற்கு வழி வகுக்கலாம். இந்நிலையில் இறைதூதைப் பின் பற்றாததால் மனித குலத்திற்கு உலகில் நேரிடும் துன்பங்களுக்கும்,அது வழிகேட்டில் சென்ற மைக்குமான பொறுப்பைஇறைதூதை எத்தி வைக்குமாறு பணிக்கப்பட்டும் அதனை செவ்வனே எத்தி வைக்காதவர்கள் சுமந்தே ஆக வேண்டும்.

ஆனால்இறைதூதர்களைப் பொறுத்தமட்டில்தம் மீது சுமத்தப்பட்டி ருந்த பணியை அவர்கள் செவ்வனே நிறைவேற்றினார்கள். இறை தூதைப் பூரணமாக ஒப்புவித்தார்கள். இந்தவகையில்கனதியான இந்த அமானிதத்தை திறம்பட செயற்படுத்தி முடித்த தூய நிலையிலேயே அவர்கள் தங்கள் இரட்சகனை நோக்கிப் பயணித்தார்கள். அவர்கள் இறைதூதை வெறுமனே நாவினால் மாத்திரம் ஒப்புவித்துவிட்டுச் செல்லவில்லை. மாற்றமாக செயற்களத்தில் நடைமுறைப்படுத் திக் காட்டிவிட்டும் சென்றிருக்கிறார்கள்.

அவர்களது பிரச்சாரப் பணிக்கு முன்னால் குறுக்கீடு செய்த தடைகளை யும் தடுப்புகளையும் நீக்குவதற்காக அவர்கள் இரவு,பகலாக  அயராது உழைத்தார்கள். புனைந்துவிடப்படும் கட்டுக் கதைகளாகவோ கிளறி விடப்படும் சந்தேகங்களாகவோ,கவர்ச்சிகரமான வழிகேடுகளாகவோ இந்தத் தடைகள் அமைந்தன. அவ்வாறேஇறைத் தூதை செவிமடுக்க விடாது தடுத்து குழப்பிவிடும் எல்லைமீறிய தாகூத்களாகவும் இத்தடை கள் காணப்பட்டன.  இவ்வேளைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் ஏனைய தூதுவர்கள் போன்றே இத்தடைகளை நீக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செவ்வனே செய்தார்கள்.

இனிநபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு இந்தக் கனதியான பணியை நிறைவேற்ற வேண்டிய கட மைப்பாடு அவர்களது தூதை ஏற்ற முஃமின்கள் மீதுதான் காணப்படுகிறது. நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னர் ஒன்றின் பின் ஒன்றாக பல தலைமுறைகள் வந்தனவந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சந்ததியும் தனக்குப் பின்னால் வரும் சந்ததிக்கு இந்தத் தூதை எத்திவைக்கும் கடமைப் பாட்டைக் கொண் டுள்ளன.

இந்தக் கனதியான கடமைப்பாட்டிலிருந்து யாரும் தப்பி விட முடியாது. மக்கள் நியாயம் கூறி அல்லாஹ்விடம் தப்பிக்கொள்ளாமல் இருக்க வும்மறுமையின் தண்டனையிலிருந்து மக்களை மீட்பதற்கும்உலக வாழ்வின் துன்ப துயரங்களி லிருந்து அவர்களைக் காப்பதற்கும்இந்தத் தூதை எத்திவைக்கும் பணியை செய்தேயாக வேண்டியுள்ளது. அதுவும்நபி (ஸல்) அவர்கள் எத்தி வைத்த அதே முறைவழியில் இந்தத் தூதை கச்சிதமாக எத்தி வைப்பதனூடாகவே இது சாத்தியமாகும்.

ஏனெனில்நமக்கு முன்னால் இருப்பதும் நபி (ஸல்) அவர்கள் எத்தி வைத்த அதே ரிஸாலத் தான். மனிதர்களும் அதே மனிதர்கள்தான். வழி கேடுகளும்மனோ இச்சைகளும்கிளப்பப்படும் சந்தேகங்களும்தூண்டப்படும் இச்சைகளும் அங்கும் இருந்தன. அவ்வாறே மக்க ளுக்கும் தஃ வாப் பணிக்கும் தடையாக நிற்கும் எல்லைமீறிய தாகூத் சக்திகள் அங்கும் இருந்தன. இந்த தாகூத்கள் வழிகேடுகளைக் கொண் டும் பலத்தைப் பிரயோகித்தும் மக்களை தீனை விட்டும் குழப்பிக் கொண்டிருந்தன.

சந்தர்ப்பம் - அதே சந்தர்ப்பம். தடைகள் - அதே தடைகள். மக்கள் - அதே மக்கள். அப்படியாயின் இந்தத் தூதை எத்திவைப்பதும் தீனை நிலை நிறுத்துவதும் நிகழ்ந்தே ஆகவேண்டும். எத்தி வைக்கும் பணி விளக்கி வைப்பதாகவும் அமைய வேண்டும். எனவேஇத்தூதை எத்திவைப்பவர்கள்தாம் எத்திவைப்பவற்றின் உயிர்த்துடிப்பான நடமா டும் முன்மாதிரிகளாகத் திகழ வேண்டும்.

எனவேகட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ள இந்தப் பணியை சுமக்காது தப்பித்துக் கொள்ள எந்த சாட்டுப் போக்கும் கிடையாது. அப்படிப் புறக்க ணித்தால் பாரதூரமான ஒரு பொறுப்புக்கு நாம் ஆளாக வேண்டிவரும். முழு மனித குலமும் வழிகேட்டில் சென்று,இந்த உலகில் அனுப வித்துக் கொண்டிருக்கும் இன்னல்களுக்கான பொறுப்பை நாம் சுமக்க வேண்டியிருக்கும். அத்தோடு அல்லாஹ்விடம் மறுமையில் மக்கள் நியாயம் கூறிநரக நெருப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான சந் தர்ப்பத்தை இழக்கச் செய்யாததற்கான பொறுப்பை நாம் முழுமையாக ஏற்க வேண்டி வரும்.
இந்தப் பாரிய பொறுப்பை சுமப்பதற்கான சக்தி யாருக்குத்தான் இருக் கும்! இது முதுகெலும்மை முறித்துஎலும்பு மூட்டுக்களின் பிணைப்பை அகற்றி மெய் சிலிர்க்கச் செய்யும் பாரியகனதியான பொறுப்பல்லவா?" (பீ லிலாலில் குர்ஆன் - பாகம்: 6, பக்: 31                                                                                  ஆக்கம் : அஹமத் முஹம்மத் ராஷித்
தமிழில்: மிஹ்ழார் எம். ரஷீத் நன்றி : மீள்பார்வை

No comments: